இயல் தலைப்பிலுள்ள பதிவுகள்

தமிழ் அமிழ்தம் இனி தமிழமுதம் ஆக மாறிவிட்டது!

தமிழ் அமிழ்தம் இனி தமிழமுதம் ஆக மாறிவிட்டது!

அன்பு நண்பர்களே, மறுபடியும் ஒரு சந்தோஷமான விஷயம். எனது வலைத்தளத்தின் பெயரான http://www.tamilamirtham.org/ என்பது சரியான தமிழ் உச்சரிப்பாக இல்லையென்று நீங்களனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் அமுதம் என்று வைக்கலாம் என்ற யோசனைக்குப் பிறகு கடைசியாக ஐயா தமிழ்த் தேனீ கூறியபடி தமிழமுதம் என்று வைப்பதென்று முடிவுசெய்து அந்த டொமைனை தேட அதுவும் அதிர்ஷ்டவசமாக யாரும் எடுக்காமல் இருந்ததில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். புதிய டொமைனை (வலைத்தள முகவரி) உருவாக்கி என் முழு தளத்தையும் புதிய முகவரிக்கு பதிவேற்றிவிட்டேன். [...]

கருத்துகள் இல்லை

தமிழ் அமிழ்தம் – இலக்கியங்களின் இணையத் தொகுப்பு…

அன்பு நண்பர்களே, அனைவருக்கும் நானொரு மகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். தமிழ் அமிழ்தம் என்கிற ஒரு புதிய வலைத்தளத்தை நான் ஆரம்பித்திருக்கின்றேன். ஏற்கனவே ஏகப்பட்ட தமிழ் வலைத்தளங்கள் இருக்க, இப்படி ஒரு புதிய வலைத்தளம் ஏன் தேவைப்படுகின்றது என்று நீங்கள் நினைக்கலாம். மற்ற வலைத்தளங்கள் பொதுவாக செய்திகள், சினிமா, தொடர்கள், கதைகள் போன்றவற்றை வழங்குவனவாக இருக்கின்றன. ஆனால் தமிழ் அமிழ்தம் அப்படி இல்லை. இதன் முக்கியக் குறிக்கோளே தமிழின் இணையற்ற அமுது போன்ற இலக்கியங்களையும் பல்வேறு தனிப்பட்ட [...]

கருத்துகள் இல்லை

கடவுள்-2048

25 வயது ஈஷ்வருக்கு உலகமே தலைகீழாய்ச் சுற்றியது. அவனுடைய காதல் மனைவியின் இழப்பை தாங்கிக்கொள்ளமுடியாமல் காரியங்கள் செய்த கையோடு முதன்முறையாக ஓயின் ஷாப்பிற்கு சென்றபோதே உயிர் நண்பன் சிவா படித்துப்படித்து சொன்னான், முதல்தடவையிலேயே இவ்வளவு சாப்பிடாதடா உயிருக்கே ஆபத்தாகப்போகுதுன்னு, கேட்டாத்தானே? துக்கம் தொண்டையை அடைக்க அதைத் திறக்க உள்ளே விட்ட ஆல்கஹாலின் அளவு அதிகமானதில் இப்போது உலகமே சுற்றுகிறது. ஆமாம் இது என்ன இடம், திடீரென்னு வெள்ளை வெளேரென்று? ஒருவேளை நண்பன் கூறியது போலவே இறந்து சொர்க்கம் [...]

6 கருத்துகள்

ஐ லவ் யூ அப்பா

வழக்கம்போல் அதிகாலையிலேயே எழுந்துவிட்ட சுபாஷ் வழக்கம் மாறாத வழக்கமாக பக்கத்து தலையணைகளை தடவ அங்கே அம்மாவும் அப்பாவும் இல்லாதது இதுவும் வழக்கமான நாள்தான் என்பதை புத்திக்கு புரியவைத்தது. ஆனால் இன்று அவனுக்கு பிறந்தநாள் ஆச்சே இன்னைக்கு கூடவா? வருத்தத்துடன் எழுந்துகொண்டு வெளியே வந்தான். “ஹேப்பி பர்த்டே செல்லக்குட்டீ…”

1 கருத்து

பாரதியின் கவிதை: காணி நிலம் வேண்டும்

பாரதியின் கவிதை: காணி நிலம் வேண்டும்

பாரதி ஒரு அற்புதமான கவிஞன். அவனுடைய கவிதைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனால் அப்படிப் பட்ட ஒரு மகாகவி இந்த உலகத்தில் வாழும்போது அவனுக்கு ஒன்றுமே இந்த உலகம் கொடுக்கவில்லை. மிகவும் வறுமையில் வாட விட்டது. அது மட்டுமில்லாமல் ஓட ஓடவும் விரட்டியது. அவன் ஆசைப் பட்ட எதுவுமே அவனுக்கு கிடைக்கவில்லை. அவன் ஆசைப்பட்டது என்னவென்று இந்தக் கவிதையில் மிகவும் அருமையாக சொல்லியிருக்கின்றான். காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் அங்குத் தூணில் [...]

3 கருத்துகள்

பாரதியின் வழியில்…

சொல்லப் போனால் பாரதி போன்ற கவிஞரும் இல்லை அவனைப் போன்ற வேகமும், அறிவும், தெளிவும் அமைந்தவர்களும் இல்லை. அவன் ஒரு அதியம். வாழ்க்கை அவனுக்கு கொடுத்த பல கஷ்டங்களே அவனை மிகவும் அறிவுடையவனாக படைத்தது என்பேன். என்னுடைய வாழ்க்கையும் கொஞ்சம் அவனைப் போன்றதுதான். எனக்கும் வாழ்க்கை மிகவும் கொடிய முகங்களைக் காட்டியிருக்கின்றது. ஆனால் அதுதான் ஒரு வேளை இன்று நான் இருக்கும் நல்ல நிலைமைக்கும், கொண்டிருக்கும் கணினி அறிவுக்கும் காரணம் என்று நினைக்கின்றேன். வாழ்க்கை தன்னை மிகவும் [...]

கருத்துகள் இல்லை

திருவாசக வாழ்த்து!

இந்தக் கவிதைகள் பக்கத்தை எனக்கு மிகவும் பிடித்த சிவபெருமானுக்கான போற்றியாக ஆரம்பிக்கின்றேன். (அட, என்னுடைய கவிதைகள் தான் இங்கே இருக்கும் என்று நினைத்தீர்களா? மற்ற எனக்குப் பிடித்தவர்களின் கவிதையும் இருக்கும். ஆனால் யாருடையது அது எனும் குறிப்பும் இருக்கும்). இங்கே திருவாசகத்திலிருந்து எனக்குப் பிடித்த இரண்டு பாடல்கள்! நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க [...]

கருத்துகள் இல்லை

பக்கம் 1 இல் 11

premium theme