பாரதி ஒரு அற்புதமான கவிஞன். அவனுடைய கவிதைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனால் அப்படிப் பட்ட ஒரு மகாகவி இந்த உலகத்தில் வாழும்போது அவனுக்கு ஒன்றுமே இந்த உலகம் கொடுக்கவில்லை. மிகவும் வறுமையில் வாட விட்டது. அது மட்டுமில்லாமல் ஓட ஓடவும் விரட்டியது. அவன் ஆசைப் பட்ட எதுவுமே அவனுக்கு கிடைக்கவில்லை. அவன் ஆசைப்பட்டது என்னவென்று இந்தக் கவிதையில் மிகவும் அருமையாக சொல்லியிருக்கின்றான். காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும் அங்குத் தூணில் [...]
01.12.07 | கவிதைகள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
சொல்லப் போனால் பாரதி போன்ற கவிஞரும் இல்லை அவனைப் போன்ற வேகமும், அறிவும், தெளிவும் அமைந்தவர்களும் இல்லை. அவன் ஒரு அதியம். வாழ்க்கை அவனுக்கு கொடுத்த பல கஷ்டங்களே அவனை மிகவும் அறிவுடையவனாக படைத்தது என்பேன். என்னுடைய வாழ்க்கையும் கொஞ்சம் அவனைப் போன்றதுதான். எனக்கும் வாழ்க்கை மிகவும் கொடிய முகங்களைக் காட்டியிருக்கின்றது. ஆனால் அதுதான் ஒரு வேளை இன்று நான் இருக்கும் நல்ல நிலைமைக்கும், கொண்டிருக்கும் கணினி அறிவுக்கும் காரணம் என்று நினைக்கின்றேன். வாழ்க்கை தன்னை மிகவும் [...]
01.3.07 | கவிதைகள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
இந்தக் கவிதைகள் பக்கத்தை எனக்கு மிகவும் பிடித்த சிவபெருமானுக்கான போற்றியாக ஆரம்பிக்கின்றேன். (அட, என்னுடைய கவிதைகள் தான் இங்கே இருக்கும் என்று நினைத்தீர்களா? மற்ற எனக்குப் பிடித்தவர்களின் கவிதையும் இருக்கும். ஆனால் யாருடையது அது எனும் குறிப்பும் இருக்கும்). இங்கே திருவாசகத்திலிருந்து எனக்குப் பிடித்த இரண்டு பாடல்கள்! நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க [...]
01.2.07 | ஆன்மீகம், கவிதைகள், வாழ்த்துக்கள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்