‘நான் கடவுள்’ படத்தைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்தே நான் நானாக இல்லை என்று சொல்லலாம். இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு முன்புதான் குப்பத்திலிருந்து கோடீஸ்வரன் (Slumdog Millionaire) படத்தைப் பார்த்ததில் ஏற்கனவே பிச்சைக்காரர்களின் கடின வாழ்க்கையைப் பார்த்து மனம் நொந்திருந்தேன். ஆனால் இந்தப் படத்தின் காட்சிகள் அதையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது. என் பார்வையில் இதுவரை இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே பிச்சைக்காரர்களின் நிதர்சன வாழ்வை இப்படி யாரும் படம் பிடித்ததில்லை. இந்த ஒரு விஷயத்திற்காகவே இந்தப் படத்தின் இயக்குநர் பாலாவிற்கு என்னுடைய [...]
03.3.09 | திரைப்படம், விமர்சனங்கள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
இந்தப் படம் இந்தியர்களை முதலில் திரும்பிப் பார்க்க வைத்து இன்று உலகையே இந்தியாவின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்திருக்கின்றது. உலக சினிமா நட்சத்திரங்களின் கனவு விருதான ஆஸ்கார் என்றழைக்கப்படும் ஆகாடமி விருதுகளில் 2008 வருஷத்திற்கான 8 விருதுகளை வென்றதுதான் இன்று உலகமே திரும்பி பார்ப்பதற்கு காரணம். விருது வாங்கிய படம் என்றாலே சிலவற்றை தவிர்த்து பொதுவாக விமர்சனங்கள் நேர்மையாக வருவதில்லை. அந்தச் சிலவற்றுள் அடங்குப்படியான ஒரு திறந்த விமர்சனம் இது. விமர்சனத்திற்கு போவதற்கு முன் இந்தப் படத்தைப் பற்றிய [...]
02.25.09 | திரைப்படம், விமர்சனங்கள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்
வாரணம் ஆயிரம் படம் பற்றிய இணையக் குழுக்களின் கருத்துக்களை பார்த்தேன். ஆனால் ஒரு நல்ல விஷயம், அந்த விமர்சனங்களை படிக்கும் முன்னரே நான் படத்தைப் பார்த்துவிட்டேன். இதனால் என்ன நல்ல விஷயம் என்றால் படத்திலிருந்த அபத்தங்களை விரிவாக காண்பித்த அதே சமயம் சில அற்புதங்களை அவர்கள் விட்டுவிட்டார்களோ என்று எனக்கு சந்தேகம் வரும் அளவிற்கு படம் நல்ல படமாக அமைந்தது. இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட இன்னொரு பாடம் எந்தப் படத்தையும் பார்க்கும் முன்னர் சில விமர்சனங்களை படித்துவிடும் [...]
11.16.08 | திரைப்படம், விமர்சனங்கள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்