நட்பு குறிச்சொல்லிட்ட பதிவுகள்

இதயமேந்திக் கேட்கின்றேன்: அத்தியாயம் இரண்டு

கெட்ட காலைப் பொழுது என்று வணக்கம் சொன்ன அருள் பிரகாசத்தை தீரனும் ரோஸ்லினும் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்க முதலில் சுதாரித்துவிட்ட தீரன் வாயைத் திறந்தான்.
“என்ன சார் இது? எப்பவும் இப்படி நீங்க பேசி நான் பார்த்ததேயில்லையே?”
“மன்னிச்சிடுப்பா, நான் சொல்ல வந்த விஷயம் எனக்குள் ஏற்படுத்திய உணர்ச்சியின் வெளிப்பாடுதான் அது. ரோஸ்லினுக்கு நான் ஒரு கெட்ட செய்தியை சொல்லியாக வேண்டும்”

கருத்துகள் இல்லை

இதயமேந்திக் கேட்கின்றேன்: அத்தியாயம் ஒன்று

விடியற்காலையிலேயே பரபரப்பாகிவிடும் கோவையின் ஆர்.எஸ். புரத்தின் டி.வி. சாமி தெருவில் கம்பீரமாக வீற்றிருந்த அந்தச் சின்ன பங்களா அமைதியாகத் தெரிந்தது. கோவையின் ஆர்.எஸ். புரம் ஒரு வணிகர் வீதி என்பதால் அதிகாலையிலேயே முழித்துக்கொண்டு நாயர் கடைகளும் பால் வழங்கு நிலையங்களுமாக பரபரப்புடன் இருந்தது. ஆர்.எஸ். புரத்தில் வீற்றிருக்கும் பல பணக்கார முதலைகளின் இல்லங்களாக விரிந்துகிடக்கும் ஒவ்வொரு தெருக்களும் காலைநேர அலுப்பில் மூழ்கிக்கிடந்தது. டி.வி. சாமி வீதியிலிருந்த அந்த சிறிய பங்களா மட்டும் வித்தியாசமாக விடிகாலையிலேயே விழித்துக்கொண்டாலும் அதிக [...]

கருத்துகள் இல்லை

இதயமேந்திக் கேட்கின்றேன்: முன்னோட்டம்…

மதுரையின் அதிகாலைச் சூரியனின் இதமான சூட்டில் எழுந்த திருமங்கலம் நகரம் கொஞ்சம் கொஞ்சமாக தன் சோம்பலை முறித்துக்கொண்டு வழக்கமான சுறுசுறுப்பை கையிலெடுத்தது. அதிகாலையிலேயே பால் போடும் பையன்களும் பேப்பர் போடும் பையன்களும் தத்தமது வேலையை உத்தமமாக செய்துகொண்டிருக்க, அதிகாலை பூஜைக்கான ஆலய மணிகள் அடிக்கத்துவங்கிவிட்டது. ஹிந்துக் கோயில்களும், கிறிஸ்தவ ஆலயங்களும், முஸ்லீம் மசூதிகளும் கலந்து ‘மதத்தினால் வேறுபடினும் மனத்தினால் நாம் இந்தியரே’ என்ற இந்திய ஒற்றுமையை பறைசாற்றிக்கொண்டிருந்தது. வாசலில் தெளித்து கோலமிடும் பண்பாடு இன்னமும் எம்மை விட்டு [...]

கருத்துகள் இல்லை

பக்கம் 1 இல் 11

premium theme