விழிகளில் துளிகள் பிரியுமோ: முன்னோட்டம்…
சூரியனின் காலைக் கதிர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கடலூரின் திடீர்குப்பம் கிராமத்தைச் சூடேற்றிக்கொண்டிருக்க, கிராமத்தை ஒட்டி இருந்த பென்னையாற்றில் சூரியக் கதிர்கள் பட்டு எதிரொலித்தது பொன்னை அள்ளிக் கொட்டியது போல ஜொலிஜொலித்தது. ஆற்றுக்கு இந்தப் பக்க கரையில் வீடுகள் குட்டி குட்டியாக முளைத்திருக்க ஆற்றின் மறுக் கரையில் நீண்ட வயல்வெளியும் அதை ஒட்டிய கள்ளுக் கடையும் தெரிந்து. ஆற்றில் எப்போதுமே இடுப்பளவு தண்ணீர் என்பதால் தைரியமாக அந்த அதிகாலை வேலையிலும் ஆற்றைக் கடந்து கள்ளுக் கடைக்கு சென்றுகொண்டிருந்த ‘குடி’மகன்களின் [...]
07.6.08 | தொடர் கதைகள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்