<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:series="http://unfoldingneurons.com/"
	>

<channel>
	<title>ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்</title>
	<atom:link href="http://tamil.sripauljoseph.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://tamil.sripauljoseph.com</link>
	<description>தீட்டாத ஓவியங்களும் தீராத எண்ணங்களும்...</description>
	<pubDate>Fri, 02 Jan 2009 04:31:34 +0000</pubDate>
	<generator>http://wordpress.org/?v=2.7</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>இனிய புத்தாண்டு 2009 நல்வாழ்த்துக்கள்!</title>
		<link>http://tamil.sripauljoseph.com/2009/01/01/happy-new-year-2009/</link>
		<comments>http://tamil.sripauljoseph.com/2009/01/01/happy-new-year-2009/#comments</comments>
		<pubDate>Thu, 01 Jan 2009 03:41:17 +0000</pubDate>
		<dc:creator>ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்</dc:creator>
		
		<category><![CDATA[பொதுவானவை]]></category>

		<category><![CDATA[வாழ்த்துக்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://tamil.sripauljoseph.com/2009/01/02/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4/</guid>
		<description><![CDATA[
]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: center;"><img class="aligncenter" title="இனிய புத்தாண்டு 2009 நல்வாழ்த்துக்கள்!" src="http://tamil.sripauljoseph.com/wp-content/uploads/2009/01/happy-new-year-2009.png" alt="இனிய புத்தாண்டு 2009 நல்வாழ்த்துக்கள்!" width="460" height="711" align="center" /></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamil.sripauljoseph.com/2009/01/01/happy-new-year-2009/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>மூன்றாவது கண் - ருத்ர முகம்: அத்தியாயம் ஏழு</title>
		<link>http://tamil.sripauljoseph.com/2008/12/29/moonravathu-kann-rudra-mugam/</link>
		<comments>http://tamil.sripauljoseph.com/2008/12/29/moonravathu-kann-rudra-mugam/#comments</comments>
		<pubDate>Mon, 29 Dec 2008 02:46:58 +0000</pubDate>
		<dc:creator>ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்</dc:creator>
		
		<category><![CDATA[தொடர் கதைகள்]]></category>

		<category><![CDATA[ஆயுதங்கள்]]></category>

		<category><![CDATA[தமிழ்நாடு]]></category>

		<category><![CDATA[தீவிரவாதம்]]></category>

		<category><![CDATA[தொழில்நுட்பம்]]></category>

		<category><![CDATA[தொடர் கதை]]></category>

		<category><![CDATA[புது தில்லி]]></category>

		<category><![CDATA[மூன்றாவது கண்]]></category>

		<category><![CDATA[ருத்ர முகம்]]></category>

		<guid isPermaLink="false">http://tamil.sripauljoseph.com/?p=89</guid>
		<description><![CDATA[இந்தப் பதிவு மூன்றாவது கண் - ருத்ர தொடரின் 8 பதிவுகளில் 8-ம் பதிவுதிட்ட மேலாளர் அறை, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை&#8230;
முத்துவேல் டென்ஷனாகிவிட்டாலே புகையை ஊதுபவர். ஆனால் இன்று வேர்த்துவழிந்தும் கூட மறுபடியும் புகைப்பிடிக்கவே அவருக்குத் தோன்றவில்லை. யாரிந்த ருத்ரன்? இரகசிய போலீசா? சி.பி.ஐ அல்லது &#8216;ரா&#8217; அமைப்பை சார்ந்தவரா? அப்படியெல்லாம் தெரியவில்லையே. கண்டிப்பாக அரசாங்க அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும். அதில் சந்தேகமே இல்லை. ஒரு தனிநபர் இந்த அலுவகத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வதும் அவர் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<div class="seriesmeta">இந்தப் பதிவு <a href="http://tamil.sripauljoseph.com/series/%e0%ae%ae%e0%af%82%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%ae/" title="series-64">மூன்றாவது கண் - ருத்ர</a> தொடரின் 8 பதிவுகளில் 8-ம் பதிவு</div><p class="MsoSubtitle"><span lang="TA"><strong>திட்ட மேலாளர் அறை</strong></span><span><strong>, </strong></span><span lang="TA"><strong>தி ஓப்பன் சிஸ்டம்ஸ்</strong></span><span><strong>, </strong></span><span lang="TA"><strong>சென்னை&#8230;</strong></span></p>
<p class="MsoNormal"><span lang="TA">முத்துவேல் டென்ஷனாகிவிட்டாலே புகையை ஊதுபவர். ஆனால் இன்று வேர்த்துவழிந்தும் கூட மறுபடியும் புகைப்பிடிக்கவே அவருக்குத் தோன்றவில்லை. யாரிந்த ருத்ரன்</span><span>? இரகசிய போலீசா? சி.பி.ஐ அல்லது &#8216;ரா&#8217; அமைப்பை சார்ந்தவரா? அப்படியெல்லாம் தெரியவில்லையே. கண்டிப்பாக அரசாங்க அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும். அதில் சந்தேகமே இல்லை. ஒரு தனிநபர் இந்த அலுவகத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வதும் அவர் கூறுவதை இந்த நிறுவன அதிபர்கள் கேட்க வேண்டும் என்ற அவசியமும் சாத்தியமில்லாதது.</span></p>
<p><span id="more-89"></span></p>
<p class="MsoNormal"><span>யோசனையிலிருந்த முத்துவேல் கதவு தட்டப்படும் சத்தத்தை கவனிக்காமலிருந்துவிட கதவு படாரென்று திறந்ததைக் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினார்.</span></p>
<p class="MsoNormal"><span>&#8220;வெளியே வருகிறீர்களா?&#8221;</span></p>
<p class="MsoNormal"><span>கதவை அடைத்துக்கொண்டு நின்றிருந்த வெள்ளைக்காரனைப் பார்த்து முத்துவேல் வியர்த்து வழிந்துகொண்டிருந்தபோதே அவனுக்குப் பக்கத்தில் நின்றிருந்த நந்தினியைப் பார்க்க புத்தி கொஞ்சம் செயலுக்கு வந்தது முத்துவேலுக்கு. மறுபேச்சு பேசாமல் வெளியே வந்த முத்துவேல் மொத்த தளமும் ஸ்தம்பித்து நின்றிருக்க அனைவரும் தங்கள் கணினிகளை நிறுத்திவிட்டு தத்தமது சுழல் நாற்காலிகளை திருப்பி ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த்தைப் பார்த்து நிலமையின் தீவிரத்தை உணர்ந்த முத்துவேல் அமைதியாக தளத்தின் மூலையில் இருந்த சுழல் நாற்காலியில் சென்று அமர்ந்தார்.</span></p>
<p class="MsoNormal"><span>தனது அறைக்கு வந்த வெள்ளைக் காரன் ஒவ்வொரு திட்ட மேலாளர்கள் அறைக்கும் சென்று அவர்களையும் வெளியே வர வைத்ததைப் பார்த்த முத்துவேலுக்கு இவர்கள் எவ்வளவு அறிவுப்பூர்வமாக செயல்படுகின்றார்கள் என்பதை வியந்த அதே நேரம் இவ்வளவு கெடுபிடிகளுக்கு நடுவில் ருத்ரன் எப்படி இவர்கள் கவனிக்காமல் இங்கே வரமுடியும் என்று எண்ணி இன்னமும் அதிகமாக வியந்தார்.</span></p>
<p class="MsoNormal"><span>அதே சமயம் நெல்சனுடன் நடந்துகொண்டிருந்த நந்தினியின் மூளை படு சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருந்தது. தாய் தந்தையரால் அன்பும் சுதந்திரமும் கொடுக்கப்பட்டு வளர்ந்த நந்தினி இயல்பிலேயே மிகவும் தைரியசாலி. பெண்களுக்கே இருக்கும் சில சின்னச்சின்ன பயங்கள்கூட அவளுக்கு கிடையாது. வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவளுக்கு இந்த தைரியமும் புத்திசாலித்தனமும்தான் மூலதனங்கள். அவ்வளவு தைரியசாலியாக இருந்தும் சிவசங்கரை நான்கு பேர் துப்பாகியின் முனையில் வைத்திருந்ததைப் பார்த்தவுடன் பயந்து அலறிவிட்டது அவளுக்கே வெட்கமாக இருந்தது. சிவசங்கரும் ஒன்றும் கோழையில்லை. கஷ்டப்பட்டுத்தான் முன்னுக்கு வந்தவர் அதனால் எந்தவிதமான இக்கட்டான சூழலையும் அவரால் சமாளிக்க முடியும். இருப்பினும் நான்கு பேர் இயந்திரத் துப்பாக்கிகளுடன் சூழ்ந்துவிட்டால் எப்பேர்ப்பட்ட மனிதராலும் ஒன்றும் செய்ய முடியாது. நல்ல வேளையாக ஒரே ஒருவன் மட்டுமே நந்தினியுடன் வந்திருக்கின்றான். மென்பொருள் துறையிலிருப்பவர்கள்தானே என்கிற அலட்சியமாக இருக்கலாம். இவனை எப்படி முடக்கிப் போடுவது என்றுதான் நந்தினியின் மூளை படு சுறுசுறுப்பாக யோசித்துக்கொண்டிருந்தது. அப்படியே ஏதோ ஒரு தந்திரத்தை உபயோகித்து அவனை முடக்கிவிட்டாலும் இன்னமும் மூன்று பேர் இருக்கின்றார்கள். அது பத்தாதென்று லிண்டா வேறு. அவர்கள் கொண்டுவந்திருந்த சூட்கேஸில் எது இருக்கின்றதோ இல்லையோ கண்டிப்பாக இன்னமும் கொஞ்சம் ஆயுதங்கள் இருக்கும் என்பதில் நந்தினிக்கு சந்தேகமே இல்லை.</span></p>
<p class="MsoNormal"><span>இவ்வளவு தடைகளை உடைக்க வேண்டுமென்றால் நான் சூப்பர் கேர்ளாக இருக்க வேண்டும். அதற்கு வழியில்லை. சே, தனியாக வேலைக்குப் போகின்றாய், சென்னை ஒன்றும் சாதாரண நகரமில்லை அதனால் தற்காப்பு கலையாக கராத்தே போன்ற எதையாவது கற்றுக்கொள் என்று அப்பா அப்பவே படித்து படித்து சொன்னார் கேட்காமல் விட்டுவிட்டேன். ஒரு வேளை கராத்தே கற்றுக்கொண்டிருந்தால் அதை உபயோகித்து இந்த நான்கு பேரையும் பந்தாடிவிடலாமோ? ஆமாம் பெரிய ரஜினிகாந்த்துன்னு நினைப்பு. நான்கு பேரை பந்தாடுறதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும். ஏதோ ஒருவர் இருவர் வழிமறித்தால் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடிவிடுவதற்கான நேரத்தைக் கொடுக்கத்தான் தற்காப்பு கலை பயன்படும். கொஞ்சம் நன்றாகவே தெரிந்திருந்தால் வேண்டுமானால் இரண்டு பேரை செயலிழக்க செய்யலாம். ஆனால் நான்கு பேர்? அதுவும் இயந்திரத் துப்பாக்கிகளோடு? சான்ஸேயில்லை. பல விதமாக சிந்தித்த நந்தினிக்கு ஒரு வழியாக வெளியிலிருந்து உதவி கிடைத்தாலொழிய வேறு வழியில்லை என்பது புலனாயிற்று. ஆனால் அதற்கு போலீஸைக் கூப்பிட வேண்டும். ஆனால் இவர்கள் புத்திசாலித்தனமாக எல்லாவித தொடர்புகளையும் துண்டித்துவிட்டார்கள். வெளியில் தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் மொபைலில்தான் கூப்பிட வேண்டும். ஆனால் பக்கத்திலேயே இருக்கும் நெல்சன் ஒவ்வொருவரையும் கழுகுபோல கண்காணிப்பதைப் பார்த்தால் மொபைலை எடுக்கிறவருக்கு உடனடி சொர்க்கம்தான். யோசனையில் மூழ்கியிருந்த நந்தினிக்கு சட்டென்று ஒரு யோசனை வந்தது.</span></p>
<p class="MsoNormal"><span>ஆமாம், நானென்ன சினிமா ஹீரோயின் போலவே யோசித்துக்கொண்டிருக்கின்றேன்? தனியாகத்தான் இந்த நால்வரை எதிர்கொள்ள வேண்டுமா என்ன? இந்த தளத்தில் குறைந்த பட்சம் </span><span lang="TA">முப்பது அல்லது </span><span>நாப்பது பேர் இருப்பார்கள். </span><span lang="TA">அனைவரும் இளைஞர்கள்</span><span>. <span lang="TA">அவர்களை உபயோகித்து இந்த நிலமையை சரிசெய்தால் என்ன</span>? <span lang="TA">அதுதான் சரியென்று அவளுக்கு தெரிந்தது. அதே சமயம் அப்படி மற்றவர்களை உபயோகிக்க வேண்டுமென்றால் அவர்களிடம் பேச வேண்டும். நிலமையை விளக்கி ஒரு நல்ல திட்டத்தை போட்டுத்தான் இவர்களை முடக்க வேண்டும். ஆனால் அதற்கெல்லாம் முட்டுக்கட்டையாக நெல்சன் இருக்கின்றான்.</span></span></p>
<p class="MsoNormal"><span lang="TA">ஒருவழியாக நெல்சனை எப்படியாவது தந்திரமாக முடக்குவது மட்டும்தான் ஒரே வழி என்று நந்தினி முடிவெடுத்து எப்படி முடக்கலாம் என்று வாய்ப்புக்காக காத்திருந்தாள்.</span></p>
<p class="MsoSubtitle"><span lang="TA"><strong>தென்னாப்ரிக்க ஹை கமிஷனர் இல்லம்</strong></span><span><strong>, </strong><span lang="TA"><strong>எம்.ஜி. ரோடு</strong></span><strong>, </strong><span lang="TA"><strong>புது தில்லி&#8230;</strong></span></span></p>
<p class="MsoNormal"><span lang="TA">அலுவல் வேலைகளுக்கு அல்லது படிக்கும் நேரத்திற்கு என்று ஹை கமிஷனர் பிரண்டன் ஃபாக்ஸ் ஒதுக்கியிருந்த அந்த தனிவீட்டின் இரண்டாவது படுக்கை அறை ஒரு குட்டி காவல் கண்காணிப்பு அறை போல மாறிவிட்டிருந்தது.</span></p>
<p class="MsoNormal"><span lang="TA">படிப்பு மேஜை முழுவதையும் எலக்ட்ரானிக் பொருட்கள் நிறைத்திருந்தன. இரண்டு மடிக்கணினிகள் இணைய இணைப்போடு தெரிய அதற்குப் பக்கவாட்டிலிருந்து நீண்ட கேபிளின் மற்றொரு முனையில் ஒரு குட்டி மௌஸ்</span><span> (<span lang="TA">கணினியில் திரையை சுட்டும் கருவி) வீற்றிருந்தது. மடிக்கணினிகளுக்குப் பக்கத்திலேயே கைக்கணினியாக பாம்ஒன்னின் டி.எக்ஸ் கருவி வீற்றிருந்தது. அதிலிருந்து இரண்டு கேபிள்கள் மடிக்கணினிகளில் இணைந்திருக்க அதனுடைய குட்டித் திரையில் சென்னையின் மவுண்ட் ரோட்டின் வரைபடம் தெரிந்தது. மேஜையின் மையத்தில் ஒரு குட்டி சாட்டிலைட் ரேடியோ யூனிட் வைக்கப்பட்டிருந்தது. மேஜை முழுவதையும் பல்வேறு விதமான கருப்பு நிற கேபிள்கள் நிறைத்திருந்தன. ஒரு வைஃபை டிரான்ஸ்மிட்டர் கருவி</span> (<span lang="TA">கணினியின் வலையமைப்பை கேபிள் இல்லாமல் காற்றில் பகிர்ந்து கொடுக்கும் கருவி) மேஜையை ஒட்டியிருந்த சுவற்றில் இன்ஸ்டன்ட் பேஸ்ட்டரால் ஒட்டப்பட்டிருந்தது. அதிலிருந்த பச்சை நிற எல்.ஈ.டி விளக்குகள் கண்சிமிட்டி தாங்கள் வேலை செய்வதை பறைசாற்றின. மடிக்கணிகளுக்கு வலப்புறம் இந்த எலக்ட்ரானிக் பொருட்களுக்கெல்லாம் சம்பந்தமேயில்லாத ஒரு கைத் துப்பாக்கி தெரிந்தது. மடிக்கணிகளுக்கு இடப்புறம் ஒரு கோக் கேன் தெரிய அதற்குப் பக்கத்திலேயே பாதி தின்றிருந்த ஒரு சிக்கன் பர்கர் தெரிந்தது.</span></span></p>
<p class="MsoNormal"><span lang="TA">அறையின் ஒரு பக்கத்திலிருந்த புத்தக அலமாரியில் பல்வேறு புத்தகங்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருப்பது தெரிய அதற்குச் சற்றும் சம்பந்தமேயில்லாமல் பாதி பகுதியை இழந்து ஒரு சிக்கன் பர்கர் தெரிந்தது. புத்தக அலமாரியை ஒட்டியிருந்த குட்டி மேஜை முழுவதும் இன்னமும் பிரிக்காமலிருந்த பர்கர்கள்</span><span>, <span lang="TA">சான்ட்விட்ச்சுகள்</span>, <span lang="TA">பிஸ்ஸாக்கள் மற்றும் ஹாட் டாக்குகள் தெரிந்தது. ஒரு சின்ன போர்ட்டபிள் எலக்ட்ரிக் டபுள் ப்ரெட் டோஸ்ட்டரும் அதற்குப் பக்கத்தில் ஒரு குட்டி ஜாம் டப்பாவும் சில பிரெட் பாக்கெட்டுகளும் தெரிந்தது.</span></span></p>
<p class="MsoNormal"><span lang="TA">அறையின் இன்னொரு பக்கம் முழுவதையும் பல்வேறு துணி மற்றும் பிளாஸ்டிக் பைகள் தெரிந்தது. அந்தப் பைகளுக்கு மத்தியில் இரண்டு ஸ்லீப்பர் பேக் தெரிய அதில் கண்மூடித் தூங்கிக்கொண்டிருந்த ஒரு வெள்ளைக்கார ஆணும் பெண்ணும் தெரிந்தனர். மடிக்கணினிகளுக்கு எதிரிலிருந்த மூன்று நாற்காலிகளில் ஒன்றை அடைத்துக் கொண்டு ஒரு சற்றே குண்டான வெள்ளையன் அமர்ந்திருந்தான். அவனுடைய தலை முழுவதையும் அடைத்துக்கொண்டு ஸிப்ரானிக்ஸின் இரைச்சல் நீக்கும் பெரிய ஹெட்செட் வீற்றிருந்தது. அவனுடைய கண்கள் மடிக்கணினியின் திரையையும் பாம்ஒன் டி.எக்ஸின் திரையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தன.</span></p>
<p class="MsoNormal"><span lang="TA">சட்டென்று அறையின் அமைதியைக் கிழித்த வண்ணம் பீப் பீப் என்று சத்தம் கேட்க. பாம்ஒன் டி.எக்ஸின் திரையை பார்த்துக்கொண்டிருந்த அந்த வெள்ளையன் சட்டென்று திரும்பி சாட்டிலைட் ரேடியோ யூனிட்டைப் பார்க்க அதிலிருந்த சிகப்பு எல்.ஈ.டி கண்சிமிட்டிக் கொண்டிருந்தது. சட்டென்று பாய்ந்து அதிலிருந்த பச்சை நிற பொத்தானை அழுத்தினான். ஹெட்செட்டில் ஒரு பெண்ணின் குரல் துல்லியமாக வழிந்தது.</span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">க்ளாவ்ஸ் டூ ஈகிள்&#8230; க்ளாவ்ஸ் டூ ஈகிள்&#8230; டூ யூ ரீட்</span>? <span lang="TA">ஓவர்!&#8221;</span></span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">ஈகிள் ரிசீவிங் சவுண்ட் அ</span>ண்ட் <span lang="TA">க்ளியர்</span>.. <span lang="TA">ப்ளீஸ் ஸ்டேட் தி கோட்&#8230; ஓவர்!&#8221;</span></span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">கோட் ஈஸ் தி வீக்கர் எனிமி&#8230; ஓவர்!</span>&#8220;</span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">கோட் வெரிஃபைட். தேங்ஸ். சொல்லு லிண்டா</span>, <span lang="TA">என்ன ஆச்சு</span>? <span lang="TA">ஏன் திடீரென்று கூப்பிட்டிருக்கின்றாய்</span>?&#8221;</span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">மேட்</span>, <span lang="TA">இங்கே ஒரு இக்கட்டான நிலமை. நோஞ்சான் எதிரியின் கணினியில் ஒரு புதுவித பாதுகாப்பு ஏற்பாடு செயல்படுத்தப் பட்டிருக்கின்றது. அது கைரேகை ஒன்றைக் கேட்கின்றது. இங்கே இருக்கும் யாருடைய கைரேகையும் அதில் பொருந்தவில்லை. ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கின்றது. நிக்கோலஸ் பார்த்துக்கொண்டிருக்கின்றான். அவனால் அந்த திரையைத் தாண்டி போக முடியாது போலிருக்கின்றது. நீ இணையம் மூலமாக உள்நுழைந்து பார்க்கின்றாயா</span>?&#8221;</span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">இது என்ன புதுக் குழுப்பம்! சரி</span>, <span lang="TA">சரி</span>, <span lang="TA">நிக்கோலஸை உடனே சாட்டிலைட் அப்லிங்க்கரை</span> (<span lang="TA">செயற்கைக் கோள் மூலம் தகவல்களை அனுப்பும் போர்ட்டபிள் யூனிட்) செட்டப் செய்து எனக்கு இரகசிய குறியிட்டைக் கொடுக்கச் சொல். நான் இணையம் மூலம் நுழைந்து பார்க்கின்றேன்.&#8221;</span></span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">அவன் ஏற்கனவே செட்டப் செய்துவிட்டான். உன்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு இரகசியக் குறியீட்டையும் அனுப்பி வைத்துவிட்டான். நான் இப்போது தொடர்பை துண்டிக்கப் போகின்றேன். நீ உள்ளே நுழைந்தபின் எனக்கு தொடர்பு கொள். எப்போதுமே பேச்சு</span> 10 <span lang="TA">நிமிஷத்திற்குள் முடிந்துவிட வேண்டும் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்.&#8221;</span></span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">சின்னக்குழந்தைக்கு சொல்ற மாதிரி சொல்லாதே லிண்டா. உன்னைவிட அதனால் ஏற்படும் பிரச்சினைகள் எனக்குத்தான் நன்றாகத் தெரியும்.&#8221;</span></span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">பாதுகாப்புக் கருதி சொன்னேன் மேட். சீக்கிரம் வேலையை பாரு. ஓவர் அ</span>ண்ட் <span lang="TA">அவுட்&#8230;&#8221;</span></span></p>
<p class="MsoNormal"><span lang="TA">தொடர்பு துண்டிக்கப்பட அறையின் அமைதி மறுபடியும் மேட்டை சூழ்ந்துகொண்டது. ஒரு நிமிஷம் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பி இந்த பிரச்சினையைப் பற்றி சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்த மேட்</span><span>, <span lang="TA">இது சுலபத்தில் தீர்ந்துவிடக் கூடிய பிரச்சினை அதற்கு ஏன் அவர்களை கஷ்டப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தான்.</span></span></p>
<p class="MsoNormal"><span lang="TA">கணினித் திரையில் வலை உலாவியை இயக்கி தன்னுடைய பாதுகாப்பான மின்னஞ்சல் சேவையை திறந்தான். இந்த மின்னஞ்சல் முகவரியை அவனை நோக்கி தொடர உபயோகிக்க முடியாது என்பது அவனுக்குத் தெரியும். மின்னஞ்சல் திறக்கப்பட முதல் அஞ்சலாக நிக்கோலஸிடமிருந்து அஞ்சல் வந்திருந்தது. அதை சொடுக்க திரையில் விரிந்து அதிலிருந்த தகவல் தெரிந்தது. தகவலில் இருந்த எண்களும் எழுத்தும் கலந்த</span><span> 32 <span lang="TA">இலக்க குறியீட்டை காப்பி செய்து கொண்டு சாட்டிலைட் அப் அண்டு டவுன் லிங்க் எக்ஸ்ப்ளோரரைத்</span> (<span lang="TA">செயற்கைக் கோள் மூலம் செய்திகள் பறிமாற உதவும் மென்பொருள்) திறந்தான். அதிலிருந்த இணைப்பு கோரல் சட்டத்தில் நிக்கோலஸ் அனுப்பியிருந்த </span>32 <span lang="TA">இலக்க குறியீட்டை பேஸ்ட் செய்ய அது திறந்து விரிந்தது. அதிலிருந்த தகவல்களை சரிபார்த்துவிட்டு கனெக்ட் டு ரிமோட் டெஸ்க்டாப்</span> (<span lang="TA">கணினித் திரையை தொலைவிலிருந்து இயக்க உதவுவது) ஐகானை சொடுக்க திரையில் ஒரு புது சட்டம் திறந்து சில நிமிடங்களுக்குப் பின் ஒரு கணினியின் திரை தெரிந்தது.</span></span></p>
<p class="MsoNormal"><span lang="TA">திரையின் மையத்தில் தெரிந்த வெள்ளைக் கட்டத்தின் உள்ளே பெரிது பெரிதாக தெரிந்த கடைசி வாய்ப்பு எச்சரிக்கை கண்களை உறுத்தியது. திரையை அப்படியே விட்டுவிட்டு மறுபடியும் சாட்டிலைட் ரேடியோ யூனிட்டை அணுகி அதிலிருந்த ஒரு குட்டி திறப்பை திறக்க அதன் பின்னால் மறைந்திருந்த டயல்கள் கண்களுக்குத் தெரிந்தது. அதில் லிண்டாவின் அலைவரிசையை அவன் சரிபார்த்துவிட்டு பச்சை நிற பொத்தானை அழுத்த ஹெட்செட்டில் சாட்டிலைட் சப்தங்கள் கேட்டன. சிறிது நேரத்தில் சப்தங்கள் தேய்ந்து தெளிவான மௌனம் கேட்க. மேட் பேச ஆரம்பித்தான்.</span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">கழுகிலிருந்து கால்களுக்கு</span>&#8230; <span lang="TA">கழுகிலிருந்து கால்களுக்கு</span>&#8230; <span lang="TA">உங்களால் கேட்க முடிகிறதா</span>? <span lang="TA">முடிந்தது!&#8221;</span></span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">கால்களுக்கு சத்தமாகவும் தெளிவாகவும் வருகின்றது&#8230; உங்களின் இரகசியத் தொடரைக் கூறுங்கள்..</span>. <span lang="TA">முடிந்தது!&#8221;</span></span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">இரகசியத் தொடர்</span>, <span lang="TA">நோஞ்சான் எதிரி&#8230; முடிந்தது!&#8221;</span></span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">தொடர் சரியாக உள்ளது. நன்றி. சொல்லு மேட்</span>, <span lang="TA">உள்ளே நுழைந்துவிட்டாயா</span>?&#8221;</span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">நுழைந்துவிட்டேன் லிண்டா</span>, <span lang="TA">இப்ப நோஞ்சான் எதிரியின் கணினித் திரையை பார்த்துகிட்டிருக்கேன். என்ன செய்யணும்னு சொல்லு!&#8221;</span></span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">என்ன செய்யணும்னு என்னைக் கேட்கின்றாயா</span>? <span lang="TA">இந்தத் திரையின் மூலம் உன்னால் எதுவும் சாதிக்க முடியாது. உன்னுடைய ஹேக்கிங் ட்ராஜனை (கணினியின் வலை இணைப்பு மூலம் பாதுகாப்பை உடைத்து உள்ளே நுழையும் நிரல்) பதிவேற்றி நுழைய முடிகிறதா சொல்லு. எக்காரணம் கொண்டும் நேரடியாக இந்த திரையில் நுழைய முயற்சிக்காதே. கடைசி வாய்ப்பு என்பதால் மூடிவிடக் கூடும்!&#8221;</span></span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">சரி லிண்டா</span>, <span lang="TA">இதோ ஒரே நிமிஷம். இணைப்பிலேயே இரு. இன்னமும் 10 நிமிஷம் ஆகிவிடவில்லை.&#8221;</span></span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">தெரியும் மேட்</span>, <span lang="TA">வேலையைக் கவனி நான் இணைப்பிலேயே இருக்கின்றேன்&#8230;&#8221;</span></span></p>
<p class="MsoNormal"><span lang="TA">மறுபடியும் மடிக்கணினியில் கவனத்தைச் செலுத்திய மேட் தட்டச்சுப் பலகையில் வேகமாக தட்ட ஆரம்பித்தான். சில நொடிகளில் திரையில் ஒரு ஹேக்கிங் ட்ராஜன் சர்வர் கணினியைக் குறிவைத்து பதிவேறத் தொடங்கியது.</span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">லிண்டா</span>, <span lang="TA">ஹேக்கிங் ட்ராஜன் பதிவேறிக்கொண்டிருக்கின்றது. அரை நிமிஷத்தில் விடை தெரிந்துவிடும்.&#8221;</span></span></p>
<p class="MsoNormal"><span lang="TA">லிண்டா பதிலளிக்காமலிருக்க</span><span>, <span lang="TA">திரையை கவனித்த மேட் திரையில் சட்டென்று வந்த செய்தியைப் பார்த்து ஆச்சரியப்பட்டான்.</span></span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">லிண்டா</span>, <span lang="TA">ஒரு சின்ன பிரச்சினை. அந்த கணினியில் சக்திவாய்ந்த </span>ஃபயர்வால் (வலை இணைப்பின் மூலம் வரும் தாக்குதல்களை சமாளிக்கும் நெருப்புச்சுவர் என்று அழைக்கப்படும் மென்பொருள்) <span lang="TA">இருக்குதுன்னு நினைக்கின்றேன்</span>. என்னோட சக்திவாய்ந்த ஹேக்கிங் ட்ராஜனையே உள்ளே நுழையவிடாமல் தடுக்கின்றது. இந்த நிலையில் ஒரே வழிதான் இருக்கின்றது. என்னுடைய யூ.எஸ்.பி ட்ராஜனை (கணினியின் பல்வேறு இணை கருவிகளுக்கு பொதுவான யூ.எஸ்.பி என்று அழைக்கப்படும் இணைப்பின் மூலம் பாதுகாப்பை உடைக்கும் நிரல்) அப்லிங்க் செய்கின்றேன். நிக்கோலஸிடம் அதைப் பதிவிறக்கம் செய்து கணினியில் போட்டு பார்க்கச் சொல். அதுவும் வேலை செய்யவில்லையென்றால் நமக்கு மிகப் பெரிய பிரச்சினைதான்.&#8221;</span></p>
<p class="MsoNormal"><span>&#8220;சரி மேட், சீக்கிரம் அனுப்பு. இங்கே ரொம்ப நேரம் என்னால் இருக்க முடியாது. <span lang="TA">முடிந்தது துண்டிக்கின்றேன்</span>!&#8221;</span></p>
<p class="MsoNormal"><span lang="TA">இணைப்பு மறுபடியும் துண்டிக்கப்பட மேட் மறுபடியும் தட்டச்சுப் பலகையில் வேகமாக தட்ட ஆரம்பித்தான்.</span></p>
<p class="MsoSubtitle"><span lang="TA"><strong>பிரிவு மேலாளர் அறை</strong></span><span><strong>, </strong></span><span lang="TA"><strong>தி ஓப்பன் சிஸ்டம்ஸ்</strong></span><span><strong>, </strong></span><span lang="TA"><strong>சென்னை&#8230;</strong></span></p>
<p class="MsoNormal"><span lang="TA">லிண்டா கடுப்புடன் ஹெட்செட்டைக் கழற்றினாள். நிக்கோலஸைப் பார்த்து எரிச்சலுடன் பேச ஆரம்பித்தாள்.</span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">நிக்</span>, <span lang="TA">மேட்டோட ஹேக்கிங் ட்ராஜன் வேலை செய்ய விடாம இந்த சர்வரோட ஃபயர்வால் தடுக்குதாம். உனக்கு யூ.எஸ்.பி ட்ராஜனை அப்லிங்க் செஞ்சுக்கிட்டிருக்கான். வருதான்னு பாரு. சீக்கிரம் நமக்கு வேலை முடிய வேண்டும்.&#8221;</span></span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">சரி லிண்டா</span>, <span lang="TA">ஒரு இரண்டு நிமிஷம் கொடு</span>, <span lang="TA">என்ன ஆச்சுன்னு சொல்றேன்.&#8221;</span></span></p>
<p class="MsoNormal"><span lang="TA">சர்வர் கணினியின் மேஜையின் மேல் வைத்திருந்த தன்னுடைய மடிக்கணினியின் தட்டச்சுப் பலகையை வேகமாக தட்ட ஆரம்பித்தான் நிக்கோலஸ்.</span></p>
<p class="MsoNormal"><span lang="TA">கணினியின் சிறிய கண்ணாடி அறையை விட்டு வெளியே வந்த லிண்டா லூயி மற்றும் பிலிப்ஸின் இயந்திரத் துப்பாக்கிகளுக்கு மத்தியில் கவலையில்லாம் உட்கார்ந்திருந்த சிவசங்கரையும் அவருடைய பக்கத்தில் சிறிது கவலை தோய்ந்த முகத்துடன் உட்கார்ந்திருந்த டேவிட் பிரசாத்தையும் அணுகினாள்.</span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">என்ன சிவசங்கர்</span>, <span lang="TA">உங்களோட ஃபயர்வால் நல்லா வேலை செய்யுதுன்னு சந்தோஷமா உட்கார்ந்திருக்கின்றீர்களா</span>? <span lang="TA">எல்லாம் இன்னும் சில நிமிடங்கள்தான். உங்களோட ஃபயர்வால் மென்பொருளோட பேர் என்னன்னு சொல்ல முடியுமா</span>?&#8221;</span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">அது நாங்களே உருவாக்கிய ஃபயர்வால் மென்பொருள் லிண்டா</span>, <span lang="TA">அதை உடைப்பது சாத்தியமில்லாதது.&#8221;</span></span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">அதையும் பார்ப்போமே. இன்னும் சில நிமிடங்களில் உங்களின் சர்வர் கணினி முழுவதும் என்னுடைய கைகளில் வந்துவிடப் போகின்றது. அப்புறம் நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இன்சாக்ரிப்டைப் பற்றிய முழுவிவரமும் எனக்குத் தெரிந்துவிடப் போகின்றது.&#8221;</span></span></p>
<p class="MsoNormal"><span lang="TA">சிவசங்கர் சிறிது கவலையுடன் லிண்டாவை பார்த்தார். ருத்ரன் சீக்கிரம் வரவேண்டும். இவர்கள் நான் நினைத்த அளவு லேசுபட்டவர்கள் இல்லை போலிருக்கின்றது. கணினித் தொழில்நுட்பத்தில் இவ்வளவு அறிவும் உபகரணங்களும் உள்ளவர்களால் எந்தக் கணினியையும் ஒரு மணி நேரத்திற்குள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட முடியும். அதிக நேரம் நமக்கு இல்லை. ருத்திரன் எங்கே இருக்கின்றாரோ</span><span>?</span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">லிண்டா</span>, <span lang="TA">இங்கே கொஞ்சம் ஓடி வா</span>&#8230;&#8221;</span></p>
<p class="MsoNormal"><span lang="TA">மடிக்கணினியை பார்த்துக்கொண்டிருந்த நிக்கோலஸ் அழைக்க திடுக்கிட்ட லிண்டா இரண்டு அடிகளில் பாய்ந்து கண்ணாடி அறைக்குள் நுழைந்தாள்.</span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">என்ன நிக்</span>, <span lang="TA">உள்ளே நுழைஞ்சுட்டியா</span>?&#8221;</span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">இன்னும் இல்ல லிண்டா. ஆனால் அதுக்குள்ள ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கிட்டோம்!&#8221;</span></span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">என்ன பிரச்சினை</span>?&#8221; <span lang="TA">சிறிது திடுக்கிட்ட குரலில் கேட்டாள் லிண்டா.</span></span></p>
<p class="MsoNormal"><span>&#8220;<span lang="TA">கொஞ்சம் சர்வர் கணினியின் திரையைப் பாரு!&#8221;</span></span></p>
<p class="MsoNormal"><span lang="TA">லிண்டா குழப்பத்துடன் சர்வர் கணினியின் திரையைப் பார்க்க அதன் திரை முழுவதும் சிவப்பாகிவிட அதன் நடுவில் கருப்பு நிறத்தில் தெரிந்த செய்தி அவளுக்குள் இடியென இறங்கியது.</span></p>
<p class="MsoNormal"><span>&#8216;<span lang="TA">கடைசி வாய்ப்பு கைரேகையை வைப்பதற்கு பாதுகாப்பான நேர அவகாசம் முடிந்துவிட்டதால்</span>. <span lang="TA">பாதுகாப்பு நலன் கருதி கணினி இன்னும்</span> 24 <span lang="TA">மணி நேரத்திற்கு மூடப்பட்டுவிட்டது. இனி நாளை மதியம்</span> 12:00 <span lang="TA">மணிக்கு அப்புறம்தான் கணினியை உபயோகிக்க முடியும்!</span>&#8216;</span></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamil.sripauljoseph.com/2008/12/29/moonravathu-kann-rudra-mugam/feed/</wfw:commentRss>
	
		<series:name><![CDATA[மூன்றாவது கண் - ருத்ர]]></series:name>
	</item>
		<item>
		<title>தமிழன்.in - உலகத் தமிழர்களின் உலகம்&#8230;</title>
		<link>http://tamil.sripauljoseph.com/2008/12/27/tamizhan-world-of-tamilans/</link>
		<comments>http://tamil.sripauljoseph.com/2008/12/27/tamizhan-world-of-tamilans/#comments</comments>
		<pubDate>Sat, 27 Dec 2008 07:18:51 +0000</pubDate>
		<dc:creator>ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்</dc:creator>
		
		<category><![CDATA[அறிவிப்புகள்]]></category>

		<category><![CDATA[பொதுவானவை]]></category>

		<category><![CDATA[பொதுவானவை]]></category>

		<guid isPermaLink="false">http://tamil.sripauljoseph.com/?p=84</guid>
		<description><![CDATA[அன்பு நண்பர்களே,
என்னுடைய தமிழமுதம் முயற்சிக்குப் பிறகு உலகத் தமிழர்களை இணைக்கவென்று ஒரு சமுதாய வலைக்கூடம் (Social Networking) அமைக்க வேண்டுமென்று விரும்பியிருந்தேன். இன்று அந்த முயற்சிக்கு உருவகம் கொடுத்துள்ளேன் என்பதை உங்களுடன் சந்தோஷத்துடன் பகிர்ந்துகொள்ளுகின்றேன்.
வெறும் சமுதாய வலைக்கூடமாக மட்டும் இல்லாமல் உறுப்பினர்களுக்கென்று தனிப்பட்ட வலைப்பூக்களை அவர்களுடைய விருப்பப் பெயருடன் அமைந்த துணை டொமைனை (Sub Domains) வைத்து உருவாக்கும்படி அமைத்துள்ளேன். இதன் மூலம் இனி உங்களுக்கு ஒரு வலைப்பூ வேண்டுமெனில் எந்த விதமான செலவும் செய்யாமல் இலவசமாக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>அன்பு நண்பர்களே,</p>
<p>என்னுடைய <a href="http://www.tamizhamutham.org/" target="_blank">தமிழமுதம்</a> முயற்சிக்குப் பிறகு உலகத் தமிழர்களை இணைக்கவென்று ஒரு சமுதாய வலைக்கூடம் (Social Networking) அமைக்க வேண்டுமென்று விரும்பியிருந்தேன். இன்று அந்த முயற்சிக்கு உருவகம் கொடுத்துள்ளேன் என்பதை உங்களுடன் சந்தோஷத்துடன் பகிர்ந்துகொள்ளுகின்றேன்.</p>
<p>வெறும் சமுதாய வலைக்கூடமாக மட்டும் இல்லாமல் உறுப்பினர்களுக்கென்று தனிப்பட்ட வலைப்பூக்களை அவர்களுடைய விருப்பப் பெயருடன் அமைந்த துணை டொமைனை (Sub Domains) வைத்து உருவாக்கும்படி அமைத்துள்ளேன். இதன் மூலம் இனி உங்களுக்கு ஒரு வலைப்பூ வேண்டுமெனில் எந்த விதமான செலவும் செய்யாமல் இலவசமாக உங்களின் பெயர் கொண்ட துணை டொமைனில் உருவாக்கிக்கொள்ளலாம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.</p>
<p>இது மட்டுமின்றி உங்களின் நண்பர்களுடன் உறவாட மற்றும் கலந்துரையாட என்று பல்வேறு வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றது.</p>
<p>இன்றே இணைந்துவிடுங்கள்: <a href="http://tamizhan.in/" target="_blank"><strong>தமிழன்.in</strong></a></p>
<p>இது தொடர்பான எந்தவிதமான சந்தேகங்களுக்கும் தொடர்புகொள்ள: <a href="mailto:help@tamizhan.in"><strong>help@tamizhan.in</strong></a> என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamil.sripauljoseph.com/2008/12/27/tamizhan-world-of-tamilans/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்&#8230;</title>
		<link>http://tamil.sripauljoseph.com/2008/12/25/merry-christma/</link>
		<comments>http://tamil.sripauljoseph.com/2008/12/25/merry-christma/#comments</comments>
		<pubDate>Thu, 25 Dec 2008 03:44:13 +0000</pubDate>
		<dc:creator>ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்</dc:creator>
		
		<category><![CDATA[பொதுவானவை]]></category>

		<category><![CDATA[வாழ்த்துக்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://tamil.sripauljoseph.com/?p=96</guid>
		<description><![CDATA[
]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: center;"><img class="size-full wp-image-149 aligncenter" title="கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!" src="http://blog.sripauljoseph.com/wp-content/uploads/2008/12/merry-christmas.jpg" alt="கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!" width="352" height="356" /></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamil.sripauljoseph.com/2008/12/25/merry-christma/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி&#8230;</title>
		<link>http://tamil.sripauljoseph.com/2008/12/08/a-tribute-to-the-brave-men-died-at-mumbai-attacks/</link>
		<comments>http://tamil.sripauljoseph.com/2008/12/08/a-tribute-to-the-brave-men-died-at-mumbai-attacks/#comments</comments>
		<pubDate>Mon, 08 Dec 2008 10:14:48 +0000</pubDate>
		<dc:creator>ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்</dc:creator>
		
		<category><![CDATA[இந்தியா]]></category>

		<category><![CDATA[பொதுவானவை]]></category>

		<category><![CDATA[அஞ்சலி]]></category>

		<category><![CDATA[நன்றி கூறல்]]></category>

		<category><![CDATA[வீர வணக்கம்]]></category>

		<guid isPermaLink="false">http://tamil.sripauljoseph.com/?p=55</guid>
		<description><![CDATA[
]]></description>
			<content:encoded><![CDATA[<div align="center"><img title="மும்பை தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி..." src="http://tamil.sripauljoseph.com/wp-content/uploads/2008/12/salute-mumbaiattacks-20081208-tamil.jpg" alt="மும்பை தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி..." width="720" height="1000" /></div>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamil.sripauljoseph.com/2008/12/08/a-tribute-to-the-brave-men-died-at-mumbai-attacks/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>வாரணம் ஆயிரம் - ஒரு திறந்த விமர்சனம்</title>
		<link>http://tamil.sripauljoseph.com/2008/11/16/vaaranam-aayiram-an-open-review/</link>
		<comments>http://tamil.sripauljoseph.com/2008/11/16/vaaranam-aayiram-an-open-review/#comments</comments>
		<pubDate>Sun, 16 Nov 2008 15:17:26 +0000</pubDate>
		<dc:creator>ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்</dc:creator>
		
		<category><![CDATA[திரைப்படம்]]></category>

		<category><![CDATA[விமர்சனம்]]></category>

		<guid isPermaLink="false">http://tamil.sripauljoseph.com/?p=51</guid>
		<description><![CDATA[வாரணம் ஆயிரம் படம் பற்றிய இணையக் குழுக்களின் கருத்துக்களை பார்த்தேன். ஆனால் ஒரு நல்ல விஷயம், அந்த விமர்சனங்களை படிக்கும் முன்னரே நான் படத்தைப் பார்த்துவிட்டேன். இதனால் என்ன நல்ல விஷயம் என்றால் படத்திலிருந்த அபத்தங்களை விரிவாக காண்பித்த அதே சமயம் சில அற்புதங்களை அவர்கள் விட்டுவிட்டார்களோ என்று எனக்கு சந்தேகம் வரும் அளவிற்கு படம் நல்ல படமாக அமைந்தது. இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட இன்னொரு பாடம் எந்தப் படத்தையும் பார்க்கும் முன்னர் சில விமர்சனங்களை படித்துவிடும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>வாரணம் ஆயிரம் படம் பற்றிய இணையக் குழுக்களின் கருத்துக்களை பார்த்தேன். ஆனால் ஒரு நல்ல விஷயம், அந்த விமர்சனங்களை படிக்கும் முன்னரே நான் படத்தைப் பார்த்துவிட்டேன். இதனால் என்ன நல்ல விஷயம் என்றால் படத்திலிருந்த அபத்தங்களை விரிவாக காண்பித்த அதே சமயம் சில அற்புதங்களை அவர்கள் விட்டுவிட்டார்களோ என்று எனக்கு சந்தேகம் வரும் அளவிற்கு படம் நல்ல படமாக அமைந்தது. இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட இன்னொரு பாடம் எந்தப் படத்தையும் பார்க்கும் முன்னர் சில விமர்சனங்களை படித்துவிடும் பழக்கம் உள்ள நான் இனிமேல் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்ததுதான். ஒரு வேளை தசாவதாரமும் எனக்கு பிடிக்காமலே போனதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். நாம் விமர்சனங்களை படித்துவிட்டு பின் படம் பார்க்கும்போது அந்தந்த விமர்சகர்களின் கருத்துக்கள் நம் மனதில் அடிக்கடி தலைகாட்டி படத்தை நமக்கு பிடித்த வகையில் பார்க்க இயலாமலேயே போய்விடுகின்றது.</p>
<p>இந்த விமர்சனத்தையும் படம் பார்த்தவர்கள் மட்டுமே படிக்கும்படி (அவர்களுடைய நல்லதுக்காகத்தான்) வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன். எனக்கு பிடித்த நான் இரசித்த வரையிலேயே இந்த விமர்சனம் அமைந்திருப்பதால் உங்களுக்கு இதில் உடன்பாடு இல்லையெனில் தயவு செய்து அதைப் பற்றி பேச வேண்டாம்.</p>
<p><span id="more-51"></span></p>
<p>தமிழ் சினிமாக்களை மட்டும் என்று இல்லை, உலக சினிமா அனைத்திலுமே நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம், சினிமா என்று வந்துவிட்டால் லாஜிக்குகள் என்று கூறப்படம் அர்த்தங்களை நாம் அதிகம் கவனிக்கக்கூடாது. சினிமா என்பதே ஒரு பேன்டசிதான். பேய்ரி டேல் (Fairy Tale) என்று கதைகளில் ஒரு பிரிவு உண்டு. இது நாம் சின்ன வயதிலிருந்து அம்மா, பாட்டி, அப்பா, ஆசிரியர் என்று பலரிடம் கேட்ட கதைகள்தான். ஆனால் அதில் எந்தக் கதையிலும் அபத்தங்கள் இல்லாமல் இருந்ததில்லை. இருப்பினும் நம்மால் அந்தக் கதைகளை மறக்கவோ இரசிக்காமலோ இருக்க முடியாது. அதற்கு காரணம் அந்தக் கதை நம்மில் ஏற்படுத்தும் பாதிப்புதான். சின்ன வயதிலேயே சில நல்ல விஷயங்களை இது போன்ற சுவாரசியமான கதைகளில் புகுத்தி நமக்கு ஊட்டிவிடுவதால்தான் இன்னமும் பலர் நல்லவர்களாகவே இருக்கின்றோம். அதுபோலவேதான் பேன்டசியும். அதில் அர்த்தங்களை தேடிக்கொண்டிருப்பதைவிட அனுபவித்தல்தான் சுகம். இதைப் புரிந்துகொள்ள எனக்கும் மிகவும் வருஷங்களாகிவிட்டது. ஒவ்வொரு படத்திலும் அபத்தங்களை தேடிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு அனுபவித்து பார்க்கும் பழக்கத்தை நான் ஏற்படுத்திக்கொண்டது மிகவும் நல்லதாக முடிந்தது எனக்கு. இதில் மற்றவர்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம் இருந்தாலும் எனக்கென்னவோ இதுதான் பிடித்திருக்கின்றது. இனி விமர்சனத்திற்கு&#8230;</p>
<p>கெளதம் மேனன் தன்னுடைய அப்பாவின் நினைவாக இயக்கியிருக்கும் படம்தான் வாரணம் ஆயிரம். &#8216;வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி நடக்கின்றான் என்றெதிர்&#8230;&#8217; என்கிற ஆண்டாள் பாட்டிலிருந்துதான் படத்தின் தலைப்பு. ஆண்டாள் தனது காதலனாகிய ஸ்ரீமன் நாராயணன் தன்னைக் கல்யாணம் செய்துகொள்ள ஆயிரம் யானைகள் சூழ ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரை வலம் செய்து வர அவரை ஆண்டாளின் தகப்பனார் பெரியாழ்வாரும் மக்களும் வரவேற்க பூரண கும்பத்துடன் நிற்பதுபோல தான் கண்ட கனவை தோழிக்கு ஆண்டாள் கூறுவது போலிருக்கும் இந்தப் பாடலின் தலைப்பு படத்திற்கு மிகப் பொருத்தம் என்றுதான் எனக்குத் தோன்றியது. இதில் வாரணம் ஆயிரம் சூழ வலம் வருபவர் சூர்யாவின் அப்பா கிருஷ்ணன். சூர்யாவும்தான் என்று படத்தின் இறுதிக்காட்சியில் சிம்ரன் கூறுவார். இரண்டு பேருமே அவரவர் மனைவிக்கு அரங்கனைப் போலிருந்தாலும் படத்தின் கதை மகன் சூர்யாவைச் சுற்றியே வருகின்றது. அப்பா சூர்யா கதையின் பிரதான நாயகனாக இருந்தாலும் அவரையும் மகனின் பார்வையிலிருந்து காட்டுவதின் மூலம் மகன்தான் பிரதான நாயகன் என்று உணர்த்தியிருக்கின்றார் இயக்குநர். இனி கதைக்கு&#8230;</p>
<p>வயதான அப்பா கிருஷ்ணனிடமிருந்து ஆரம்பிக்கின்றது கதை. முடி திருத்தம் செய்யப் போன சூர்யா திரும்ப வந்து குளியலறையில் இரத்த வாந்தி எடுக்க டாக்டர்கள் தாம் முன்னமே கூறியபடியான நிலைக்கு வந்துவிட்டதாக கைவிரிக்க தன் மகன் பெயரான சூர்யாவை சொல்லிவிட்டு சிரித்தபடியே உயிர்விடுகின்றார். அதே நேரம் இந்திய இராணுவத்தின் ஒரு முக்கியமான கடமைக்காக ஹெலிகாப்டரில் சக இராணுவ வீரர்களுடன் பயனித்துக்கொண்டிருக்கின்றார் மேஜர் சூர்யா. தொலைபேசியில் தன் தந்தை உயிர்விட்ட சேதியறிந்து மேற்கொண்டிருக்கும் கடமையை முன்னிட்டு பொறுத்துக்கொண்டு இருந்துவிடும் மேஜர் சூர்யா அமைதியாக இருந்தாலும் அவருள் இருக்கும் மகன் சூர்யா தன் அப்பாவைத் தேடி அலைய அவருடைய பார்வையில் விரிகின்றது படத்தின் கதை.</p>
<p>ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் அரவணைப்பு என்றால் தந்தைதான் கதாநாயகன் என்று ஆரம்பிக்கின்றது கதை. தன்னுடைய அப்பாவும் அம்மாவும் கொண்ட காதலையே தனக்கும் இன்ஸ்பிரேஷனாக ஏற்றுக்கொள்ளும் சூர்யாவின் வாழ்க்கையில் அவருடைய பெற்றோர் வகிக்கும் மாபெரும் பங்குதான் கதை என்றாலும் கதை மகன் சூர்யாவை சுற்றித்தான் சுழலுகின்றது. அப்பா கிருஷ்ணன் அம்மா மாலினியை சந்தித்து காதலித்ததை அம்மா மாலினி சொல்லக் கேட்கின்றார் மகன் சூர்யா. தன் தந்தையை தனது கதாநாயகனாக வைத்திருக்கும் மகன் தன்னுடைய வாழ்க்கையின் எந்தவொரு கட்டத்திலும் அப்பாவையே உதாரண புருஷராக எடுத்துக்கொள்கின்றார். ஒழுங்காக படிக்காமல் எல்லா மகன்களையும் போல தன்னுடைய கல்லூரி வாழ்க்கையை வீணடிக்கும் சூர்யாவுக்கு ஒரு இரயில் பயணத்தின்போது ஏற்படும் சந்திப்பு தன்னுடைய அம்மாவை அப்பா சந்தித்த அந்த காதலான நினைவுகளை கொண்டுவந்து அந்தப் பெண்ணுடன் பார்த்ததும் காதலில் வீழ்கின்றார். ஆனால் இப்படி பார்த்தவுடன் காதலில் நம்பிக்கையில்லாமல் அந்தப் பெண் (சமீரா ரெட்டி) தவிர்க்கப் பார்க்கும்போது தன்னுடைய தாயை தன் தந்தை எப்படி முழுதும் அள்ளிக்கொண்டு போனாரோ அதுபோலவே அந்தப் பெண்ணையும் தன்னுடைய காதலால் முழுதும் அள்ளிக்கொண்டு போவேன் என்று உறுதிகொள்ளும் சூா்யா ஒரு வாரம் கழித்து அவளை வீட்டில் சந்திக்கின்றார். இன்னமும் இவர் ஞாபகம் வைத்திருந்ததே ஆச்சரியப்படுத்தினாலும் இன்னமும் முழு நம்பிக்கை வந்துவிடாத சமீரா அமெரிக்காவுக்கான தன்னுடைய பயணத்தைப் பற்றிக் கூற வேறு வழியின்றி வீடுதிரும்பும் சூர்யா அமெரிக்கா செல்ல முடிவெடுக்கும் அதே நேரம் அப்பா மைல்ட் ஹார்ட் அட்டாக்கில் படுத்த படுக்கையாக, காதல் கனவுகள் என்று எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிட்டு பொறுப்பான பிள்ளையாக வேலை செய்தும் தன்னுடைய கித்தார் இசைத் திறமையை வைத்தும் சம்பாதித்து அப்பா தொடங்கிய வீட்டை கட்டி கடன்களை அடைத்து நல்ல நிலைக்கு வருகின்றார் மகன் சூர்யா. அதன்பின் அப்பா அம்மாவின் ஆசீர்வாதத்துடன் அமெரிக்காவுக்கு விசா எடுத்து காதலியைத் தேடி விரைகின்றார். அமெரிக்காவில் காதலியை சந்திக்க ஆச்சரியத்தில் அவரின் காதலின் ஆழம் அறிகின்றார் காதலி. பிறகு மெல்ல மெல்ல அவருக்கு இவரின் மேல் காதல் வர அதன்பிறகு எல்லாம் சுபமாக முடியப்போகின்றது என்கிற எதிர்பார்ப்பிலிருக்கும்போது எதிர்பாராவிதமாக நிகழும் ஒரு குண்டு வெடிப்பில் உயிர் துறக்கின்றார் காதலி சமீரா ரெட்டி.</p>
<p>தந்தையைப் போல தன் காதல் வாழ்வும் ஆனந்தத்தில் முடியாத வெறுப்பும் காதலியை இழந்த துக்கமும் சூர்யாவை சுழலடிக்க எல்லாவித தீய பழக்கத்திற்கும் அடிமையாகும் அவரை கொஞ்சம் கொஞ்சமாக தேற்றும் பெற்றோர் அவரின் மேல் நம்பிக்கை வைத்து அவரையே உணர்ந்துகொள்ள வேண்டி தனியாக காஷ்மீர் அனுப்புகின்றனர். காஷ்மீரில் தன்னை தேடி அலையும் சூர்யா இலக்கில்லாமல் சுற்றிக்கொண்டிருந்தபோது அமெரிக்காவிலிருந்து காதலி இறந்த சோகத்தில் வந்தபோது விமானத்தில் சந்தித்த அற்புத மனிதர் ஒருவரின் அன்புப் பிள்ளையை யாரோ கடத்திவிட்டதை அறிந்து அவரிருக்கும் டெல்லிக்கு சென்று தன்னுடைய சொந்த முயற்சியால் கஷ்டப்பட்டு அந்த மனிதரின் மகனை மீட்கின்றார். அதன்பிறகு பெற்றோரிடம் திரும்பும் சூர்யா தன்னுடைய சின்னவயதிலிருந்து இருந்த இராணுவ ஆர்வத்தை மையப்படுத்தி இப்போது இராணுவத்தில் சேர விரும்பம் தெரிவிக்க வேறு வழியின்றி மகனின் ஆசைக்கு ஒப்புதல் அளிக்கின்றனர் பெற்றோர். அதன்பிறகு இழந்துபோன காதல் எப்படி அவருக்கு தங்கையின் தோழி உருவத்தில் மறுபடியும் கிடைத்தது, அவர் மேற்கொண்ட இராணுவ கடமை என்ன ஆயிற்று என்று விடைசொல்லி முடிக்கின்றது படம்.</p>
<p>இந்தப் படத்தை ஆரம்பத்தில் பார்ப்பவர்கள் அப்பா சூர்யாவை சுற்றி இருப்பதாக எண்ணிக்கொண்டு மேலும் பார்க்க அது மகன் சூர்யாவை சுற்றி வரும்போது கண்டிப்பாக ஏமாற்றமும் கதை எங்கே போகின்றது என்கிற வெறுப்பும் ஏற்படுவது இயல்பு. ஆனால் அது மகன் சூர்யாவை சுற்றி இருப்பதை புரிந்துகொண்டு படம் பார்க்க ஆரம்பித்தால் கதையும் கோர்வையாக புரிகின்றது. சூர்யாவின் கடின உழைப்பை கண்டிப்பாக நான் பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொரு பிரேமுக்கும் உருவம் மாறும் அவர் காட்சிகளின் தேவைக்கு ஏற்ப தன்னுடைய உடலமைப்பையும் மேனரிசங்களையும் மாற்றிக்கொள்வது அற்புதம். மிகச்சிறந்த கலைஞன் தான் என்பதை சூர்யா மறுபடியும் நிரூபித்திருக்கின்றார். அதிலும் 20 வயது இளைஞனின் தோற்றமும் இராணுவ வீரரின் தோற்றமும் வயதான அப்பா தோற்றமும் அவர் கண்டிப்பாக மிகவும் கஷ்டப்பட்டு செய்திருப்பது தெரிகின்றது. இந்தப் படம் சூர்யாவுக்கு ஒரு மைல்கல். இராணுவ வீரனாக வரும் சூர்யாவின் உடம்பும் கம்பீரமும் நாமும் இராணுவத்தில் சோ்ந்தால் என்ன என்று தோண வைப்பது அருமை.</p>
<p>இளமையாக வரும் சிம்ரன் ஆச்சரியம். அதேசமயம் முதுமையாக வரும் சிம்ரனை ஏனோ அவ்வளவாக இம்சிக்காமல் அப்படியே விட்டிருக்கின்றார்கள். ஒருவேளை சிம்ரன் ஏற்கனவே வயதான தோற்றம் தருகிறார் என்பதாலா என்னவோ தெரியவில்லை. ஆனால் சிம்ரனின் நடிப்பு நிறைவைத் தந்தது. சமீரா ரெட்டியும் நடிக்க முயற்சி செய்திருக்கின்றார் ஆனால் மொழி புரியாததால் என்னவோ அவரால் அவ்வளவு சிறப்பாக நடிக்க இயலவில்லை. ஒருசில காட்சிகளில் மட்டும் அற்புதமாக பொருந்துகின்றார். தங்கையாக வருபவர் ஞாபகத்தில் பதிய மறுக்கின்றார். தங்கையின் தோழியாக வரும் திவ்யா அழகு. அதுவும் அவர் தனது காதலை சொல்லும் இடம் அற்புதமான கவிதை. அதே சமயம் காதலனின் ஒப்புதலைப் பெற டெல்லி வரை வந்திருந்தவளை பிடித்திருக்கின்றது பிடிக்கவில்லை என்று ஒரு முடிவாக சொல்லாத முன் தொட முயற்சிக்கும் சூர்யாவிடம் அவர் காட்டும் கோபமும் கேள்விகளும் அற்புதம். எனக்கும் உன்னோட தோள்ல சாய்ந்துக்கனும் உன்னை கிஸ் பண்ணனும்னு ஆசைதான் ஆனால் என்னை பிடிச்சிருக்கா இல்லையா என்றதையே சொல்லாமல் தொட பார்க்கிற நீ என்ன மாதிரியான மனுஷன் என்கிற அவருடைய கேள்வி ஏனோ என்னை மிகவும் இம்சித்தது. வருவது கொஞ்சம் நேரம் என்றாலும் நிறைவாக செய்திருக்கின்றார்.</p>
<p>இயக்குனரைப் பொறுத்தவரை கெளதம் மேனனுக்கு இது புதிது. அவரிடமிருந்து இப்படி ஒரு படத்தை நானும் எதிர்பார்க்கவேயில்லை. அருமையாக செய்திருக்கின்றார். ஒரு நிறைவான சேரன் படம் பார்த்த திருப்தி நிலவுகின்றது. அப்பா சூர்யா வரும் காலக்கட்டங்களில் பிரேமின் ஒவ்வொரு அங்குலத்தையும் அந்தக் காலக்கட்டங்களுக்கு ஏற்ப வடிவமைத்திருப்பது அருமை. அப்பாவிலிருந்து மகன் சூர்யா வரைக்குமான பல்வேறு காலமாற்றங்களை அற்புதமாக இயக்கியிருக்கின்றார். ஒளிப்பதிவு கொஞ்சம் எரிச்சலை உண்டாக்கினாலும் நன்றாக இருக்கின்றது. இசை படத்துடன் இணைந்திருப்பது அழகு. ஹாரிஸ் ஜெயராஜ் சில இடங்களில் வியக்க வைக்கின்றார். இருப்பினும் சில பாடல்கள் திணிக்கப்பட்டதுபோலிருக்கின்றது. பாடல்களை காட்சியாக்கியிருக்கும் விதம் அருமை. அமெரிக்காவையும் காஷ்மீரையும் இதுவரை இந்திய சினிமாக்களில் காண்பிக்காத வண்ணம் அழகாக காண்பித்திருப்பது அருமை. வசனங்கள் சில இடங்களில் மின்னுகின்றது.</p>
<p>கொஞ்சம் மேல்தட்டு வர்க்கம் என்று தோன்ற வைக்கும் அதிக ஆங்கில உச்சரிப்புகள் கொஞ்சம் நெருடலைக்கொடுத்தாலும் நடக்கும் நிகழ்வுகள் அதை மறக்கடிக்கின்றன. சாதாரணமாக ஒத்துக்கொள்ள முடியாத சில காட்சிகளும் உண்டு. ஆனால் அப்பாவும் மகனும் நண்பர்கள் என்று காண்பிப்பதற்காக இருவரும் ஒன்றாக உட்கார்ந்து பீர் அடிப்பது போல் காண்பிக்கும் தமிழ் சினிமாவின் வழக்கமான அறிவுகெட்டத்தனம் இல்லாதது கொஞ்சம் ஆறுதல். காட்சிகள் தொடர்ச்சியாக இல்லாது ஒரு குறை போலிருந்தாலும் அப்பா மற்றும் மகனின் வாழ்க்கயின் பல்வேறு பதிவுகள் என்கிற வகையில் அவை கோர்வையாகத்தான் இருக்கின்றன. ஒவ்வொரு காட்சியில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் பின்னால் எதனுடனோ தொடர்பு இருக்கின்றது. ஒரு சில அபத்தங்களும் இந்த படத்தை அபத்தத்தை தேடுபவர்களுக்கு பிடிக்காமல் செய்துவிடுகின்றன. எனக்கு என்னவோ இயக்குனர் சில அபத்தங்களை சுவாரசியம் கருதியே வைத்திருப்பது போலிருந்தது இல்லையென்றால் இவ்வளவு நீளப் படத்தை பார்ப்பதும் கடினம்தான். ஒரு உதாரணம் எல்லா தமிழ் படத்திலும் வரும் வகையில் ஒரே பாடலில் கதாநாயகன் சிறப்பான நிலைக்கு வந்து வீடெல்லாம் கட்டி முடிப்பது. ஆனால் அப்படி இல்லையென்றால் ஏற்கனவே நீளமான படத்தில் சூா்யா எப்படி எல்லாம் முன்னுக்கு வந்தார் என்பதை விரிவாகக் காட்டுதல் இன்னமும் நீட்டித்து போரடித்துவிட வைக்கும். ஒரு நாவலைப் படிப்பதுபோல்தான் இந்தப் படமும் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் கீழே வைத்தல் முடியாதது. அதுபோலவே இயல்பான காதலும் காமமும் கூட அசிங்கம் இல்லை என்றுதான் படம் உணர வைக்கின்றது. காமத்தையும் காதலாகத்தான் காட்டப்பட்டிருக்கின்றது. அப்பாவை இத்தனை வயதுக்குப் பிறகும் வா போ என்றும் பெயர் சொல்லியுமே பேசும் அம்மா தமிழ்சினிமாவுக்கு கொஞ்சம் புதியதுதான். அப்பா என்று அழைப்பதை விட டாடி என்றும் மாமா அத்தை என்பதை விட அங்கிள் ஆண்டி என்றும் அழைக்கும் பிள்ளைகளும் மருமகள்களும்கூட கொஞ்சம் நெருடல்கள்தான். இருப்பினும் இதன்மூலம் இயக்குநர் காண்பிக்க விழைவது என்ன என்பது அவ்வளவாக விளக்கப்படவில்லை.</p>
<p>இரசித்த தருணங்கள் மகிழ்ந்த தருணங்கள் அழுத தருணங்கள் எரிச்சல்பட்ட தருணங்கள் என்று இந்த மொத்த படமே எனக்கு ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு போலத்தான் இருந்தது. இருப்பினும் ஒரு நிறைவான அனுபவத்தை வழங்க படம் தவறவில்லை. ஒருசில காட்சிகள் திரையரங்கை விட்டு வெளியே வந்தபின்னும் நினைவிலிருந்து நீங்க மறுத்தன.</p>
<p>சண்டைக் காட்சிகள் இயல்பாக இருந்தது ஆச்சரியம் அதுவும் கெளதம் மேனனின் படத்தில். டெல்லியில் பையனை கடத்திக்கொண்டு போன ரெளடிகளுடன் சூா்யா மோதும் இடம் இதற்கு பொருத்தமான எடுத்துக்காட்டு. கிளைமாக்ஸ் இராணுவ சண்டைக் காட்சி அற்புதம். என்ன நடக்குமோ என்று கொஞ்ச நேரம் சீட்டின் நுனியில் உட்கார வைத்துவிட்டார். படம் முழுவதுமே கொஞ்சம் சாப்டாக போவது சிலருக்கு சீக்கிரமே தூக்கத்தை வரவழைக்கலாம். ஆனால் எனக்கு அனுபவமாகவே இருந்தது. காதலி இறந்தபின் அப்பா அம்மாவிடம் போனில் அழுது அலறும் மகன் &#8216;We made love daddy&#8217; என்று அங்கலாய்ப்பது தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் புதிது. அதுபோலவே காதலியாக ஏற்றுக்கொண்டதாக கூறிய மறுகணமே தங்கையின் தோழியுடன் படுக்கையில் விழும் காட்சிகளும் கொஞ்சம் நெருடலைக்கொடுத்தாலும் இயல்பான காதலாலான காமத்தைத்தான் அது காட்டுகின்றது என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. ஒருவேளை முந்தைய காதலின் வடுக்களுக்கு இது தேவையான வடிகால் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.</p>
<p>மொத்தத்தில் இந்த படத்தில் காண்பிக்கப்படும் காட்சிகளில் ஒரு சிலவற்றையாவது தங்கள் சொந்த வாழ்க்கையில் அனுபவித்தவர்களுக்கு இந்தப் படம் ஒரு சிறப்பான அனுபவம்.</p>
<p>எனக்கு அப்படியே&#8230;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamil.sripauljoseph.com/2008/11/16/vaaranam-aayiram-an-open-review/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>தமிழ் அமிழ்தம் இனி தமிழமுதம் ஆக மாறிவிட்டது!</title>
		<link>http://tamil.sripauljoseph.com/2008/07/22/tamilamirtham-is-now-tamizhamutham/</link>
		<comments>http://tamil.sripauljoseph.com/2008/07/22/tamilamirtham-is-now-tamizhamutham/#comments</comments>
		<pubDate>Tue, 22 Jul 2008 17:42:14 +0000</pubDate>
		<dc:creator>ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்</dc:creator>
		
		<category><![CDATA[பொதுவானவை]]></category>

		<category><![CDATA[அறிவிப்புகள்]]></category>

		<guid isPermaLink="false">http://tamil.sripauljoseph.com/?p=42</guid>
		<description><![CDATA[
அன்பு நண்பர்களே,
மறுபடியும் ஒரு சந்தோஷமான விஷயம். எனது வலைத்தளத்தின் பெயரான http://www.tamilamirtham.org/ என்பது சரியான தமிழ் உச்சரிப்பாக இல்லையென்று நீங்களனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் அமுதம் என்று வைக்கலாம் என்ற யோசனைக்குப் பிறகு கடைசியாக ஐயா தமிழ்த் தேனீ கூறியபடி தமிழமுதம் என்று வைப்பதென்று முடிவுசெய்து அந்த டொமைனை தேட அதுவும் அதிர்ஷ்டவசமாக யாரும் எடுக்காமல் இருந்ததில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். புதிய டொமைனை (வலைத்தள முகவரி) உருவாக்கி என் முழு தளத்தையும் புதிய முகவரிக்கு பதிவேற்றிவிட்டேன். இனிமேல் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><img class="size-full wp-image-44" title="tamizhamutham-logo" src="http://tamil.sripauljoseph.com/wp-content/uploads/2008/07/tamizhamutham-logo.png" alt="தமிழமுதம் சின்னம்" width="250" height="64" /></p>
<p>அன்பு நண்பர்களே,</p>
<p>மறுபடியும் ஒரு சந்தோஷமான விஷயம். எனது வலைத்தளத்தின் பெயரான <a href="http://www.tamilamirtham.org/" target="_blank">http://www.tamilamirtham.org/</a> என்பது சரியான தமிழ் உச்சரிப்பாக இல்லையென்று நீங்களனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் அமுதம் என்று வைக்கலாம் என்ற யோசனைக்குப் பிறகு கடைசியாக ஐயா தமிழ்த் தேனீ கூறியபடி தமிழமுதம் என்று வைப்பதென்று முடிவுசெய்து அந்த டொமைனை தேட அதுவும் அதிர்ஷ்டவசமாக யாரும் எடுக்காமல் இருந்ததில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். புதிய டொமைனை (வலைத்தள முகவரி) உருவாக்கி என் முழு தளத்தையும் புதிய முகவரிக்கு பதிவேற்றிவிட்டேன். இனிமேல் நண்பர்கள் <a href="http://www.tamilamirtham.org/" target="_blank">http://www.tamilamirtham.org/</a> என்று மறந்து தட்டச்சிட்டாலும்கூட அது <a href="http://www.tamizhamutham.org/" target="_blank">http://www.tamizhamutham.org/</a> என்கிற புதிய சரியான முகவரிக்கு செல்லும்படி திருப்பியனுப்பிவிட்டேன். கருத்தும் ஆலோசனையும் வழங்கிய உங்களனைவருக்கும் மிகவும் நன்றி&#8230;</p>
<p><span style="font-size: x-large;"><strong><a href="http://www.tamizhamutham.org/" target="_blank">http://www.tamizhamutham.org/</a></strong></span></p>
<p>என்பதே இனி நமது தமிழமுதத்தின் முகவரி.</p>
<p>நன்றி&#8230;</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamil.sripauljoseph.com/2008/07/22/tamilamirtham-is-now-tamizhamutham/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>தமிழ் அமிழ்தம் - இலக்கியங்களின் இணையத் தொகுப்பு&#8230;</title>
		<link>http://tamil.sripauljoseph.com/2008/07/21/tamizh-amizhtham-ilakkiyangalin-inayath-thoguppu/</link>
		<comments>http://tamil.sripauljoseph.com/2008/07/21/tamizh-amizhtham-ilakkiyangalin-inayath-thoguppu/#comments</comments>
		<pubDate>Mon, 21 Jul 2008 08:02:07 +0000</pubDate>
		<dc:creator>ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்</dc:creator>
		
		<category><![CDATA[குறிப்புகள்]]></category>

		<category><![CDATA[தமிழ் மொழி]]></category>

		<category><![CDATA[பொதுவானவை]]></category>

		<category><![CDATA[இலக்கியங்கள்]]></category>

		<category><![CDATA[வலைத்தளம்]]></category>

		<guid isPermaLink="false">http://tamil.sripauljoseph.com/?p=40</guid>
		<description><![CDATA[அன்பு நண்பர்களே,
அனைவருக்கும் நானொரு மகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
தமிழ் அமிழ்தம் என்கிற ஒரு புதிய வலைத்தளத்தை நான் ஆரம்பித்திருக்கின்றேன்.
ஏற்கனவே ஏகப்பட்ட தமிழ் வலைத்தளங்கள் இருக்க, இப்படி ஒரு புதிய வலைத்தளம் ஏன்  தேவைப்படுகின்றது என்று நீங்கள் நினைக்கலாம். மற்ற வலைத்தளங்கள் பொதுவாக  செய்திகள், சினிமா, தொடர்கள், கதைகள் போன்றவற்றை வழங்குவனவாக இருக்கின்றன. ஆனால்  தமிழ் அமிழ்தம் அப்படி இல்லை. இதன் முக்கியக் குறிக்கோளே தமிழின் இணையற்ற  அமுது போன்ற இலக்கியங்களையும் பல்வேறு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>அன்பு நண்பர்களே,</p>
<p>அனைவருக்கும் நானொரு மகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.</p>
<p><a href="http://www.tamilamirtham.org/" target="_blank"><strong>தமிழ் அமிழ்தம்</strong></a> என்கிற ஒரு புதிய வலைத்தளத்தை நான் ஆரம்பித்திருக்கின்றேன்.</p>
<p>ஏற்கனவே ஏகப்பட்ட தமிழ் வலைத்தளங்கள் இருக்க, இப்படி ஒரு புதிய வலைத்தளம் ஏன்  தேவைப்படுகின்றது என்று நீங்கள் நினைக்கலாம். மற்ற வலைத்தளங்கள் பொதுவாக  செய்திகள், சினிமா, தொடர்கள், கதைகள் போன்றவற்றை வழங்குவனவாக இருக்கின்றன. ஆனால் <a href="http://www.tamilamirtham.org/" target="_blank"> தமிழ் அமிழ்தம்</a> அப்படி இல்லை. இதன் முக்கியக் குறிக்கோளே தமிழின் இணையற்ற  அமுது போன்ற இலக்கியங்களையும் பல்வேறு தனிப்பட்ட படைப்புகளையும் என்றும்  அழியாவண்ணம் இணையத்திலேயே வைத்திருப்பதுதான். இதன் மூலம் பல அழியா இலக்கியங்கள்  இணையத்தில் என்றும் வாழ்ந்திருக்கும் நம் தமிழ் மொழியின் பெருமையை இன்னும் வரும்  பல்வேறு தலைமுறைகளுக்கும் அளிக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.</p>
<p>இந்த <a href="http://www.tamilamirtham.org/" target="_blank"><strong>தமிழ் அமிழ்தம்</strong></a> வலைத்தளம் தற்போது எனது சொந்த நிறுவனமான <a href="http://www.ishatechnologies.in/" target="_blank"><strong>ஈஷா  தொழில்நுட்பங்கள்</strong></a> நிறுவனத்தின் மூலம் உருவாக்கி மேலாண்மை செய்யப்பட்டு  வந்தாலும், வெகு விரைவில் தமிழ் அமிழ்தத்திற்கு என்று ஒரு தனிப்பட்ட அறக்கட்டளையை  உருவாக்கி அறக்கட்டளையில் இணைந்த பெரியோர்களே இந்த வலைத்தளத்தை மேலாண்மை செய்யும்  வகையில் அமைக்க இருக்கின்றேன். இதன் மூலம் எனது நிறுவனம் அழிந்தாலும் தமிழ்  அமிழ்தம் என்றும் அழியாமல் இருக்கும்.</p>
<p><span style="text-decoration: underline;">தற்போது கீழ்க்கண்ட வசதிகளை தமிழ் அமிழ்தம் தனது உறுப்பினர்களுக்கு  வழங்குகின்றது:</span></p>
<ul>
<li>இலவச உறுப்பினர் கணக்கு</li>
<li>உறுப்பினர் விவரம் (படங்களுடன்)</li>
<li>உறுப்பினர் வலைப்பூக்கள்</li>
<li>பக்கங்கள்</li>
<li>புத்தகங்கள்</li>
<li>இழைகள்</li>
<li>விவாதங்கள்</li>
<li>உறுப்பினர் படங்கள் (புகைப்பட வரிசையுடன்)</li>
<li>மின்தாள்கள் (ePapers)</li>
<li>வினா - விடைகள்</li>
<li>கருத்து ஓட்டுப் பெட்டிகள்</li>
<li>ஆதாரச் சான்றுகள்</li>
<li>உடனடி செய்திச் சேவை (RSS)</li>
</ul>
<p>இன்னும் பலவித வசதிகள் விரைவில் தமிழ் அமிழ்தத்தில் உறுப்பினர்களுக்கும்  விருந்தினர்களுக்கும் வழங்கப்படும்&#8230;</p>
<p>உங்களில் எவரேனும் புதிய வசதிகளை ஏற்படுத்தும்படி யோசனை கொடுத்தாலும் அதை அறிமுகப்படுத்த நான் முயல்வேன். தயவு செய்து உங்களின் மேலான கருத்துக்களை வழங்குவதோடு மட்டுமின்றி இன்றே தமிழ் அமிழ்தத்தில் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.</p>
<p>உங்களுக்கு எளிதாக இருக்க வேண்டும் என்று திறந்த அட்டை (OpenID) முறையையும் இந்த வலைத்தளத்தில் ஏற்படுத்தியிருப்பதால் நீங்கள் ஏற்கனவே இந்த ஓப்பன் ஐடியை உபயோகிப்பவராக இருந்தால் எளிதில் இணைந்துவிடலாம். இல்லையென்றாலும் புதிதாக இணைவது மிகவும் எளிதான விஷயமே.</p>
<p>நீங்களனைவரும் உங்களின் படைப்புகளில் பொது மக்களுக்கு என்னென்ன கொடுக்க விரும்புகின்றீர்களோ அவை அத்தனையையும் தமிழ் அமிழ்தத்தில் வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.</p>
<p>இன்றே செல்வீர்: <strong>தமிழ் அமிழ்தம் - <a href="http://www.tamilamirtham.org/" target="_blank">http://www.tamilamirtham.org/</a></strong></p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://tamil.sripauljoseph.com/2008/07/21/tamizh-amizhtham-ilakkiyangalin-inayath-thoguppu/feed/</wfw:commentRss>
		</item>
		<item>
		<title>கோவை பதிவர் சந்திப்பு - ஓரு நேரடிப் பார்வை&#8230;</title>
		<link>http://tamil.sripauljoseph.com/2008/07/16/kovai-pathivar-santhippu-or-neradi-paarvai/</link>
		<comments>http://tamil.sripauljoseph.com/2008/07/16/kovai-pathivar-santhippu-or-neradi-paarvai/#comments</comments>
		<pubDate>Wed, 16 Jul 2008 09:09:08 +0000</pubDate>
		<dc:creator>ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்</dc:creator>
		
		<category><![CDATA[பொதுவானவை]]></category>

		<category><![CDATA[சந்திப்பு]]></category>

		<category><![CDATA[பதிவர்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://tamil.sripauljoseph.com/?p=39</guid>
		<description><![CDATA[கோவை சந்திப்பு வருகிற 13ம் தேதி நிகழ இருக்கின்றது என்று மஞ்சூரண்ணன் சொன்னதிலிருந்தே முதன்முறையாக இத்தகைய சந்திப்புகளில் கலந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு அடக்கமுடியாமலிருந்தது. கோவையில் மூன்று வருடங்கள் வேலை செய்ததில் எனக்கு கிடைத்திருந்த நண்பர்கள் கூட்டம் மிகப்பெரியதென்பதால் தங்குவதைப் பற்றி கவலைப்படாமல் புகைவண்டிக்கு டிக்கெட்டும் எடுத்துவிட்டபின்தான் யோசித்தேன். எங்கே நடக்கிறது கோவையில்???? இருக்கிற எல்லா மின்னஞ்சல்களையும் அலசி ஆராய்ந்ததில் சென்னை சந்திப்பு இடம் மட்டுமே கொடுக்கப்பட்டு கோவை சந்திப்புக்கான இடம் கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்துகொண்டேன். அவசர அவசரமாக [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>கோவை சந்திப்பு வருகிற 13ம் தேதி நிகழ இருக்கின்றது என்று மஞ்சூரண்ணன் சொன்னதிலிருந்தே முதன்முறையாக இத்தகைய சந்திப்புகளில் கலந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு அடக்கமுடியாமலிருந்தது. கோவையில் மூன்று வருடங்கள் வேலை செய்ததில் எனக்கு கிடைத்திருந்த நண்பர்கள் கூட்டம் மிகப்பெரியதென்பதால் தங்குவதைப் பற்றி கவலைப்படாமல் புகைவண்டிக்கு டிக்கெட்டும் எடுத்துவிட்டபின்தான் யோசித்தேன். எங்கே நடக்கிறது கோவையில்???? இருக்கிற எல்லா மின்னஞ்சல்களையும் அலசி ஆராய்ந்ததில் சென்னை சந்திப்பு இடம் மட்டுமே கொடுக்கப்பட்டு கோவை சந்திப்புக்கான இடம் கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்துகொண்டேன். அவசர அவசரமாக மஞ்சூரண்னன் என்னிடம் பேசியிருந்த அரட்டையை பார்த்தால் அதிலும் அவர் கோவை வந்தபின் எண் கொடுக்கின்றேன் என்று கூறியிருந்தும் இன்னமும் எண் கொடுக்கப்படவில்லையென்பதை உணர்ந்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ஆபத்பாந்தனாக நம்ம வேந்தர் ஐயா அரட்டையில் வந்தார். உடனே அவரிடம் பிரச்சினையைக் கூறி அலைபேசி எண் கேட்க அவரும் மஞ்சூரண்ணனின் எண் கொடுத்துவிட்டு தொடர்புகொள்ளுங்கள் என்றார். தொடர்பு கொண்டால் அந்த எண்ணுக்கு அழைப்புகளே போகவில்லை. அதைக்கேட்ட அவர் மறுபடியும் தமிழ்பயணி சிவாவின் (சிவக்குமார்) அலைபேசி எண்ணைக் கொடுத்து முயன்றுபாருங்கள் என்று கூற நானும் அவசரத்தில் 98 என்று ஆரம்பித்த எண்ணில் 93 என்று ஆரம்பித்து அழைத்துவிட ஒரு பெண் எடுத்து ராங் நம்பர் என்று முகத்திலடித்தாற்போல கூறிவிட்டு வைத்துவிட்டார். ஒருவேளை அவருடைய மனைவி யாரேனும் எடுத்து கடுப்பில் பேசுகின்றார்களோ என்றுதான் முதலில் நினைத்தேன். :)))</p>
<p><span id="more-39"></span></p>
<p>இதென்னடா வம்பாபோச்சு என்று மறுபடியும் வேந்தரை அணுகினால் அவருக்கோ மிகவும் குழப்பம் இந்த எண்தானே கொடுத்தார் என்று அவருடனான அரட்டையை எனக்கு வழங்கினார் அதில் எண் பார்த்தபின்தான் நான் செய்த தவறு தெரிய வேந்தரிடம் விளக்கிவிட்டு எண்ணை சரிசெய்து அழைத்தால் இரண்டு மணியிலேயே எடுத்துவிட்டார் சிவா. விவரத்தைக் கூற அவரோ உடனே முகவரியை வழங்கி வாருங்கள் வந்து கலந்துகொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டார். நிம்மதியுடன் கோவைக்குப் பயணமான எனக்கு அங்கு சேர்ந்த இரண்டு மணி நேரத்திலேயே அலுவலகத்திலிருந்து அழைப்பு. மாலைக்குள் வந்து ஒரு அமெரிக்க வாடிக்கையாளரிடம் பேச வேண்டும் என்று. சரி, மதியத்திற்குள் சந்திப்புக்கு போய் ஒரு மணிநேரமாவது கலந்துகொள்ளுவோம் என்று ஆர்வமிகுதியில் என் பால்யகாலத்து நண்பர் திரு. விநோத் குமார் (இவர் பதிவர் இல்லை) அழைத்துக்கொண்டு எனது நிக்கான் கேமராவையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டேன்.கொடுக்கப்பட்ட அட்ரஸ் விசாரித்து செல்ல மிகவும் குழப்பமாகிவிட்டது. ஒரு ஆட்டோக்காரர் தவறான வழியை கொடுத்துவிட சிவாவைத் தொடர்பு கொண்டேன். சாந்தி மெடிக்கல்ஸ் எதிரிலேயே இருக்கிற ரோட்டில் வந்தால் சாமியானா போட்ட மாடி தெரிகிற வீடு என்றார். சரியென்று வைத்தபின்தான், சாந்தி மெடிக்கல்ஸ் எங்கே என்று தேட ஆரம்பித்து இன்னொரு ஆட்டோக்காரரை அணுக, அவர் பொறுமையுடன் தங்கம் தங்கம் என்று என்னை அழைத்துக்கொண்டே வழி கூறியது (கோவை மனிதர்களின் மரியாதையே மரியாதை) இதமாக இருந்தது. கடைசியில் வீட்டைக் கண்டுபிடித்து பைக்கை பார்க் செய்துவிட்டு பார்த்தால் கேட் மூடிக்கிடக்கிறது. மறுபடியும் சிவாவிற்கு அடிக்க அலைபேசியை எடுத்தால் ஏற்கனவே ஐயா மிஸ்டு கால் கொடுத்திருந்தார். அழைத்த உடனே மாடிப்படியில் தலைகாட்டிய முகத்தைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. சிவாவா??? மாடியில் ஏறி வாங்கன்னு சொல்ல கேட்டைத் திறந்து பார்த்தபின்தான் அது பூட்டியிருக்கவில்லை என்பது என் சிறு புத்திக்குப் புரிந்தது. மேலே ஏறி வந்து பார்த்தால் ஏகப்பட்ட முகங்கள். மஞ்சூர் அண்ணன் மட்டும் சொல்லாமலேயே தெரிந்துவிட்டது. உத்வேகமாக பேசிக்கொண்டிருந்த வா. சுப்பையா (வாத்தியார் சுப்பையா) ஐயா அவர்களை கொஞ்சம் நிறுத்திவிட்டு என்னைப் பற்றிய அறிமுகம் கொடுத்தார் அண்ணன். அப்புறம் சஞ்சய் வந்து என்னுடன் கைகுலுக்கிக்கொண்டார். என்னடா இந்தப் பெயர்களெல்லாம் முத்தமிழிலேயே இல்லையே என்று யோசித்தப்பின்தான் தெரிந்தது சந்திப்புக்கு வந்திருந்ததில் பெரும்பாலானோர் தமிழ் மணம் குழுமத்தை சேர்ந்தவர்கள் என்பது. அடடா அந்தக் குழுவில் நான் இன்னமும் இணையவில்லையா என்று யோசித்து முதலில் இணைந்துவிடுவது என்று முடிவெடுத்தப்பின் உட்கார்ந்தேன். சட்டென்று வந்து வடையையும் குடிக்க குளிர்பானத்தையும் (மிராண்டான்னு நினைக்கின்றேன்) கொடுத்தார் மஞ்சூர் அண்ணன்.  காலையிலேயே தாமதமாக சாப்பிட்டது நினைவுக்கு வர, குளிர்பானத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மீதியை அப்படியே நண்பர் பக்கம் தள்ளிவிட்டேன். சுப்பையா அவர்கள் தீவிரமாக பேசிக்கொண்டிருந்ததை காதுகொடுத்து கேட்க ஆரம்பிக்க சிவா சுத்திச்சுத்தி வந்து புகைப்படங்களாக சுட்டுத்தள்ளுவதையும், சஞ்சயும் மற்றவர்களும் வீடியோக்களும் புகைப்படங்களுமாக அலைவதையும் பார்த்தபின்தான் நான் கேமரா கொண்டுவந்திருந்தது ஞாபகத்திற்கு வர, சிவாவை அழைத்து எனக்காக புகைப்படங்கள் எடுக்க சொல்ல, முகம் சுளிக்காமல் அன்போடு எடுத்துக்கொண்டு சென்று எல்லாரையும் சுற்றிச் சுற்றி எடுத்தவர் என்னிடம் வந்து கொடுத்துவிட்டு இதுல நானிருக்க மாட்டேன் நீங்க எடுங்க என்றபின் அவரையும் சஞ்சையையும் வைத்து ஒரு படம் எடுத்தேன் (கொஞ்சம் டார்க்காக வந்துவிட்டது மன்னிக்கவும்). அப்புறம் என் நண்பர் விநோத் குமார் எடுத்துக்கொண்டு வலம் வந்தார்.</p>
<p>இந்த அமளி துமளியில் கால்வாசி கேட்டதில் வாத்தியார் சுப்பையா ஐயா என்ன சொல்கின்றார் என்பதையே என்னால் முழுவதும் கவனித்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் நீண்ட உரைக்குப்பின் விடைபெற்று போய்விட்டார். அதன்பின் இளைய தலைகள் நிறைய உள்ளே நுழைய ஆரம்பிக்க மஞ்சூரண்ணனை பார்த்து அறிமுகம் செய்துவிட்டு உரைகளை தொடங்கலாமே என்ற கேள்வியுடன் நான் பார்த்துக்கொண்டிருக்க என்னைப் பார்க்காத அவருக்கு எப்படியோ அதே எண்ணமே தோன்றி அறிமுகம் செய்துவிட்டு உரைகளை ஆரம்பிக்கலாம் என்று அறிவிக்க எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதன்பின் ஒருவர்பின் ஒருவராக எல்லாரும் அறிமுகம் செய்துகொண்டார்கள். சந்திப்புக்கு வந்திருந்தவர்களின் விவரம் (சிவாவின் வலைப்பூவிலிருந்து சுட்டது):</p>
<ul>
<li><a href="http://podian.blogspot.com/" target="_blank">சஞ்சய்காந்தி</a></li>
<li><a href="http://manjoorraja.blogspot.com/" target="_blank">மஞ்சூர் ராசா</a></li>
<li><a href="http://www.tamilpayani.com/" target="_blank">தமிழ்பயணி சிவா</a></li>
<li><a href="http://www.blogger.com/www.osai.tamil.net/" target="_blank">ஓசை செல்லா</a></li>
<li><a href="http://puravee.blogspot.com/" target="_blank">புரவி ராம்</a></li>
<li><a href="http://www.thiagu1973.blogspot.com/" target="_blank">செம்மலர் தியாகு</a></li>
<li><a href="http://devakottai.blogspot.com/" target="_blank">சுப்பைய்யா</a></li>
<li><a href="http://www.myspb.blogspot.com/" target="_blank">கோவை ரவி</a></li>
<li><a href="http://lathananthpakkam.blogspot.com/" target="_blank">லதானந்த்</a></li>
<li><a href="http://mooligaivazam-kuppusamy.blogspot.com/" target="_blank">கே.பி. குப்புசாமி</a></li>
<li><a href="http://maravalam.blogspot.com/" target="_blank">வின்செண்ட்</a></li>
<li> <a href="http://siththan.com/" target="_blank">ஞானவெட்டியான்</a></li>
<li><a href="http://www.tamil.sripauljoseph.com/" target="_blank">ஸ்ரீநிவாசன் பால் ஜோசப் (நான்!)<br />
</a></li>
<li>வினோத் - பதிவர் இல்லை (எனது நண்பர்)</li>
<li><a href="http://veyilaan.wordpress.com/" target="_blank">வெயிலான்</a></li>
<li><a href="http://www.parisalkaaran.blogspot.com/" target="_blank">பரிசல்காரன்</a></li>
<li><a href="http://www.rainbowstreet-karthik.blogspot.com/" target="_blank">கார்த்திக்</a></li>
<li><a href="http://www.thottarayaswamy.net/" target="_blank">தொட்டராயஸ்வாமி</a></li>
<li><a href="http://www.vadakaraivelan.blogspot.com/" target="_blank">வடகரை வேலன்</a></li>
<li><a href="http://www.girirajnet.blogspot.com/" target="_blank">கிரி</a></li>
<li><a href="http://www.npandian.blogspot.com/"