மூன்றாவது கண் – ருத்ர முகம்: அத்தியாயம் ஏழு
திட்ட மேலாளர் அறை, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை…
முத்துவேல் டென்ஷனாகிவிட்டாலே புகையை ஊதுபவர். ஆனால் இன்று வேர்த்துவழிந்தும் கூட மறுபடியும் புகைப்பிடிக்கவே அவருக்குத் தோன்றவில்லை. யாரிந்த ருத்ரன்? இரகசிய போலீசா? சி.பி.ஐ அல்லது ‘ரா’ அமைப்பை சார்ந்தவரா? அப்படியெல்லாம் தெரியவில்லையே. கண்டிப்பாக அரசாங்க அதிகாரியாகத்தான் இருக்க வேண்டும். அதில் சந்தேகமே இல்லை. ஒரு தனிநபர் இந்த அலுவகத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்வதும் அவர் கூறுவதை இந்த நிறுவன அதிபர்கள் கேட்க வேண்டும் என்ற அவசியமும் சாத்தியமில்லாதது.
12.29.08 | தொடர் கதைகள் | ஸ்ரீநிவாசன் அ. பால் ஜோசப்