தமிழ் அமிழ்தம் இனி தமிழமுதம் ஆக மாறிவிட்டது!


பதிவை அச்செடு பதிவை அச்செடு

அன்பு நண்பர்களே,
மறுபடியும் ஒரு சந்தோஷமான விஷயம். எனது வலைத்தளத்தின் பெயரான http://www.tamilamirtham.org/ என்பது சரியான தமிழ் உச்சரிப்பாக இல்லையென்று நீங்களனைவரும் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் அமுதம் என்று வைக்கலாம் என்ற யோசனைக்குப் பிறகு கடைசியாக ஐயா தமிழ்த் தேனீ கூறியபடி தமிழமுதம் என்று வைப்பதென்று முடிவுசெய்து அந்த டொமைனை தேட அதுவும் அதிர்ஷ்டவசமாக யாரும் எடுக்காமல் இருந்ததில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். புதிய டொமைனை (வலைத்தள முகவரி) உருவாக்கி என் முழு தளத்தையும் புதிய முகவரிக்கு பதிவேற்றிவிட்டேன். இனிமேல் [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை

தமிழ் அமிழ்தம் - இலக்கியங்களின் இணையத் தொகுப்பு…


பதிவை அச்செடு பதிவை அச்செடு

அன்பு நண்பர்களே,
அனைவருக்கும் நானொரு மகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
தமிழ் அமிழ்தம் என்கிற ஒரு புதிய வலைத்தளத்தை நான் ஆரம்பித்திருக்கின்றேன்.
ஏற்கனவே ஏகப்பட்ட தமிழ் வலைத்தளங்கள் இருக்க, இப்படி ஒரு புதிய வலைத்தளம் ஏன் தேவைப்படுகின்றது என்று நீங்கள் நினைக்கலாம். மற்ற வலைத்தளங்கள் பொதுவாக செய்திகள், சினிமா, தொடர்கள், கதைகள் போன்றவற்றை வழங்குவனவாக இருக்கின்றன. ஆனால் தமிழ் அமிழ்தம் அப்படி இல்லை. இதன் முக்கியக் குறிக்கோளே தமிழின் இணையற்ற அமுது போன்ற இலக்கியங்களையும் பல்வேறு [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை

கோவை பதிவர் சந்திப்பு - ஓரு நேரடிப் பார்வை…


பதிவை அச்செடு பதிவை அச்செடு

கோவை சந்திப்பு வருகிற 13ம் தேதி நிகழ இருக்கின்றது என்று மஞ்சூரண்ணன் சொன்னதிலிருந்தே முதன்முறையாக இத்தகைய சந்திப்புகளில் கலந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு அடக்கமுடியாமலிருந்தது. கோவையில் மூன்று வருடங்கள் வேலை செய்ததில் எனக்கு கிடைத்திருந்த நண்பர்கள் கூட்டம் மிகப்பெரியதென்பதால் தங்குவதைப் பற்றி கவலைப்படாமல் புகைவண்டிக்கு டிக்கெட்டும் எடுத்துவிட்டபின்தான் யோசித்தேன். எங்கே நடக்கிறது கோவையில்???? இருக்கிற எல்லா மின்னஞ்சல்களையும் அலசி ஆராய்ந்ததில் சென்னை சந்திப்பு இடம் மட்டுமே கொடுக்கப்பட்டு கோவை சந்திப்புக்கான இடம் கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்துகொண்டேன். அவசர அவசரமாக [...]

9 கருத்துக்கள்

கடவுள்-2048


பதிவை அச்செடு பதிவை அச்செடு

இந்தப் பதிவு ஸ்ரீயின் சிறுகதைகள் தொடரின் 2 பதிவுகளில் 2-ம் பதிவு25 வயது ஈஷ்வருக்கு உலகமே தலைகீழாய்ச் சுற்றியது. அவனுடைய காதல் மனைவியின் இழப்பை தாங்கிக்கொள்ளமுடியாமல் காரியங்கள் செய்த கையோடு முதன்முறையாக ஓயின் ஷாப்பிற்கு சென்றபோதே உயிர் நண்பன் சிவா படித்துப்படித்து சொன்னான், முதல்தடவையிலேயே இவ்வளவு சாப்பிடாதடா உயிருக்கே ஆபத்தாகப்போகுதுன்னு, கேட்டாத்தானே? துக்கம் தொண்டையை அடைக்க அதைத் திறக்க உள்ளே விட்ட ஆல்கஹாலின் அளவு அதிகமானதில் இப்போது உலகமே சுற்றுகிறது. ஆமாம் இது என்ன இடம், திடீரென்னு [...]

6 கருத்துக்கள்

மூன்றாவது கண் - ருத்ர முகம்: அத்தியாயம் ஆறு


பதிவை அச்செடு பதிவை அச்செடு

இந்தப் பதிவு மூன்றாவது கண் - ருத்ர தொடரின் 8 பதிவுகளில் 7-ம் பதிவுபிரிவு மேலாளர் அறை, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை…
சிவசங்கரின் தொலைபேசி அழைப்பை ஏற்று விரைந்து வந்த நந்தினி கண்ணெதிரே விரிந்த காட்சியைக் கண்டு ‘ஆ’வென அலற வாயைத் திறக்க லூயி பாய்ந்து அவளின் வாயைப் பொத்தினான்.
சிவசங்கர் வேர்த்துவழிந்துகொண்டு நின்றுகொண்டிருக்க அவருக்கு முன்னால் இரண்டு பக்கங்களிலும் கைகளில் அதிநவீன இயந்திரத் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டிருந்த நெல்சனும் நிக்கோலசும் தெரிந்தார்கள். லிண்டா நான்கு பேருக்கும் நடுவில் மையமாக [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை

மூன்றாவது கண் - ருத்ர முகம்: அத்தியாயம் ஐந்து


பதிவை அச்செடு பதிவை அச்செடு

இந்தப் பதிவு மூன்றாவது கண் - ருத்ர தொடரின் 8 பதிவுகளில் 6-ம் பதிவுதிட்ட மேலாளர் அறை, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை…
முத்து வேல், பெயருக்கு ஏற்ப திருமணம் ஆனபிறகும் பிற பெண்களின் மேல் காதல் கொள்பவர் என்பதை அவருடைய வயதுக்கு மீறிய அலங்காரங்கள் கூறியது. வயது ஒரு நாப்பதை நெருங்கிக்கொண்டிருந்தாலும் தோற்றத்தில் இருபது வயது இளமையைக் காட்ட மிகவும் கஷ்டப்பட்டிருந்தார். தாடையிலும் உதட்டுக்கு மேலும் ஒரு முடிகூட தெரியாத அளவு மழுங்க சவரம் செய்திருந்ததோடு மட்டுமின்றி [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை

மூன்றாவது கண் - ருத்ர முகம்: அத்தியாயம் நான்கு


பதிவை அச்செடு பதிவை அச்செடு

இந்தப் பதிவு மூன்றாவது கண் - ருத்ர தொடரின் 8 பதிவுகளில் 5-ம் பதிவுஇயங்குதள மென்பொருட்கள் பிரிவு, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை…
நீண்டு வளர்ந்திருந்த தளம் முழுவதும் கண்களை உறுத்தாத வெளிர் பச்சை நிறத்தில் இதமாக தெரிந்த மூன்று பக்க சுவர்களுக்கு அடுத்த நான்காவது பக்கம் முழுவதும் சூரியக் கதிர்கள் தடுக்கப்பட்ட தடிமனான கண்ணாடிகளால் சூழப்பட்டு வெளியுலக காட்சிகளை கருநீலநிறத்தில் நிறமேற்றிக் காண்பித்துக்கொண்டிருந்தன. வெளியே தகித்துக்கொண்டிருந்த சென்னையின் காலைநேர வெயிலின் கொடுமையை புத்தி உணர்ந்தாலும் உடல் உணராத [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை

மூன்றாவது கண் - ருத்ர முகம்: அத்தியாயம் மூன்று


பதிவை அச்செடு பதிவை அச்செடு

இந்தப் பதிவு மூன்றாவது கண் - ருத்ர தொடரின் 8 பதிவுகளில் 4-ம் பதிவுபிரிவு மேலாளர் அறை, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை…
நிக்கோலஸ் மற்றும் நெல்சனின் கைகளில் முளைத்திருந்த கறுப்பு நிற மெஷின் கன்களைப் பார்த்து சிவசங்கருக்கு வாயடைத்துவிட்டது. தூதரக அதிகாரிகளுக்கு எப்போதிருந்து மெஷின் கன்களை உபயோகப்படுத்தும் உரிமை கிடைத்தது? இவர்கள் உண்மையான தூதரக அதிகாரிகள் போலத் தெரியவில்லையே?
“லிண்டா, நீங்கள் எல்லாம் யார்? எதற்காக அவர்களிருவரும் கைகளில் இயந்திரத் துப்பாக்கிகளை வைத்திருக்கின்றார்கள்?”

கருத்துக்கள் வழங்கப்படவில்லை

மூன்றாவது கண் - ருத்ர முகம்: அத்தியாயம் இரண்டு


பதிவை அச்செடு பதிவை அச்செடு

இந்தப் பதிவு மூன்றாவது கண் - ருத்ர தொடரின் 8 பதிவுகளில் 3-ம் பதிவுபிரிவு மேலாளர் அறை, தி ஓப்பன் சிஸ்டம்ஸ், சென்னை, தமிழ்நாடு…
டொக் டொக்…
கதவு சப்தத்தை கேட்டு தனது கணினி திரையிலிருந்து பார்வையை விலக்கிய சிவசங்கருக்கு நடுத்தர வயது. தலையில் ஒரு வெள்ளை முடிகூடத் தெரியாமல் (நிரந்தர சாயம் அடிப்பவர்) தனது வயதிற்கும் சற்றுக் குறைவான தோற்றத்தை வழங்கியபடி தெரிந்த சிவசங்கர் பெயருக்கு ஏற்ப தீவிர சிவன் பக்தர் என்பதை டை அணியாத கழுத்து வளைவில் [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை

மூன்றாவது கண் - ருத்ர முகம்: அத்தியாயம் ஒன்று


பதிவை அச்செடு பதிவை அச்செடு

இந்தப் பதிவு மூன்றாவது கண் - ருத்ர தொடரின் 8 பதிவுகளில் 2-ம் பதிவுசிருங்கார சென்னை, தமிழ்நாடு…
சென்னையின் சுள்ளென்ற வெயிலடிக்க ஆரம்பித்துவிடும் காலைப்பொழுதின் அவசரத்தில் அலுவலகத்திற்கு விரையும் அலுவலகர்களும், புத்தகங்களின் சுமையழுந்தியதால் இளமையில் கூன்விழுந்த குழந்தைகளும், இளமைத்துள்ளல் என்ற நினைப்பில் படிக்கட்டில்தான் பயணம் செய்வேன் என்று அடம்பிடிக்கும் இளவட்ட கல்லூரி மாணாக்கர்களும், அவர்களின் சீண்டல்களுக்குப் பயந்து ஒளிந்துகொள்ள முயற்சி செய்து முடியாமல் வியர்வை மழையில் நனைந்து அதில் அங்கங்கள் தெரிந்துவிடுமோ என்ற கலாச்சார பயத்தில் இழுத்துப்பிடித்துக்கொண்டு நின்றிருக்கும் [...]

கருத்துக்கள் வழங்கப்படவில்லை